தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5.84 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5.84 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 5 லட்சத்து 84 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது நேற்று நடந்த விவாதம்:

கோவி.செழியன் (திமுக):

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த போது, ஏழை மாணவர்களுக்கு மாநகராட்சி பள்ளிகளில் இலவச கணினி பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அதை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தினார். இவ்வாறாக தந்தையும், மகனும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.

பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:

மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான். கடந்த 4 ஆண்டுகளில் 32 லட்சம் மாணவர் களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 5 லட்சத்து 84 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:

ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 2011-ம் ஆண்டு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உருவாக்கப்பட்டது. அதன்கீழ், இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதை பின்பற்றி உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவும், மடிக்கணினி வழங்குவதாக அறிவித்தார். ஆனால், ஓராண்டு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பின் நிதிநிலையை காரணம் காட்டி நிறுத்தி விட்டார். ஆனால், தமிழகத்தில் 32 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நேற்று விவாதம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in