நாளைமுதல் வெப்பம் குறையும்: சென்னைக்கு வெப்பச்சலனம் காரணமாக மழை; வானிலை ஆய்வு மையம்

நாளைமுதல் வெப்பம் குறையும்: சென்னைக்கு வெப்பச்சலனம் காரணமாக மழை; வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

சென்னைக்கு, அடுத்த 2 நாட்களில் மழை வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பத்தின் தாக்கமும் நாளைமுதல் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தமிழகத்தில் ஜூன் 15-க்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூரில் மற்றும் புதுவையில் வரும் 2 நாட்களுக்கு வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதிகமாக அனல் காற்றும் வீசும்.

அதிகபட்சமாக வேடச்சந்தூரில் 7 செ.மீ. மழையும், திண்டிவனத்தில் 5 செ.மீ.மழையும் பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 நாளைக்கு  லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in