பழக்கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞர்: கடை உரிமையாளர் சாமர்த்தியத்தால் சிக்கினார்

பழக்கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற இளைஞர்: கடை உரிமையாளர் சாமர்த்தியத்தால் சிக்கினார்
Updated on
1 min read

சென்னை வண்ணாரப்பேட்டை அருகே, பழக்கடையில் கள்ள ரூபாய் நோட்டை மாற்ற முயன்றார் இளைஞர் ஒருவரை. பழக்கடை உரிமையாளர் சாமர்த்தியமாக  போலீஸில் பிடித்து கொடுத்தார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் உஷா என்பவருக்கு சொந்தமான பழக்கடை உள்ளது. இங்கு நேற்று மோட்டார் பைக்கில் வந்த இருவர் மாம்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை வாங்கினர். பின்னர் அதில் ஒருவர் புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டு ஒன்றை கொடுத்தார்.

அதைப்பார்த்த கடை உரிமையாளக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அந்த இளைஞருடன் நைசாக பேச்சுக்கொடுத்த அவர் போலீஸுக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் வருவதை அறிந்த அவரது நண்பர் அங்கிருந்து நழுவினார்.

போலீஸார் விரைந்து வந்து 2000 ரூபாய் நோட்டை கொடுத்த இளைஞரை பிடித்தனர். அவரது நோட்டை சோதித்தபோது அது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. அவரை சோதித்தபோது அவர் மேலும் 2 எண்ணிக்கையிலான் 2000 ரூபாய் மற்றும்  இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார். அவைகளும் கள்ளநோட்டுகள் என சோதனையில் தெரியவந்தது.

அவரை உடனடியாக கைது செய்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்  தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகம்மது ரஃபீக் என்பது தெரியவந்தது. தப்பியோடிய  அவரது கூட்டாளியை போலீஸார் தேடிவருகின்றனர்.

கள்ளநோட்டுகள் இவர்களிடம் வந்தது எப்படி ரபீக்கின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in