நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்க தீர்மானத்தை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும்: 154 வழக்கறிஞர்கள் கடிதம்

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்க தீர்மானத்தை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும்: 154 வழக்கறிஞர்கள் கடிதம்
Updated on
2 min read

மதுரை: ​தி​முக, காங்​கிரஸ் கூட்​டணி எம்​. பி.க்​கள் அளித்​துள்ள நீதிபதி ஜி.ஆர்​.சுாவ​மி​நாதனை பதவி நீக்​கம் செய்​யக்​கோரிய தீர்​மானத்தை தொடக்க நிலை​யிலேயே நிராகரிக்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி மக்​கள​வைத் தலை​வருக்​கு, உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு வழக்​கறிஞர்​கள் 154 பேர் கடிதம் அனுப்​பி​யுள்​ளனர்.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் உத்தரவிட்டார்.

இந்த உத்​தர​வுக்கு திமுக உள்​ளிட்ட சில கட்​சிகள் எதிர்ப்​புத் தெரி​வித்து வரு​கின்​றன. மேலும், நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை பதவி நீக்​கம் செய்​யும் தீர்​மானத்தை நிறைவேற்​றக் கோரி திமுக - காங்​கிரஸ் கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகள் மக்​கள​வைத் தலை​வருக்கு கடிதம் கொடுத்​துள்​ளன. திமுக - காங்​கிரஸ் கட்சி எம்​.பி.க்​களின் இந்த நடவடிக்​கையை ஓய்​வு​பெற்ற நீதிப​தி​கள் 56 பேர் கண்​டித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் கொண்டு வந்​துள்ள தீர்​மானத்​தைத் தொடக்க நிலை​யிலேயே நிராகரிக்க வேண்​டும் என்று உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு மூத்த வழக்​கறிஞர்​கள் ஆனந்த பத்​ம​நாபன், பழனி வேல்​ராஜன், கதிர்​வேலு, வழக்​கறிஞர் சீனி​வாச​ராகவன் உட்பட 154 வழக்​கறிஞர்​கள் மக்​கள​வைத் தலை​வருக்கு கடிதம் அனுப்​பி​யுள்​ளனர்.

குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அதில் கூறி​யிருப்​ப​தாவது: நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் மீது தெரிவிக்​கப்​பட்​டுள்ள குற்​றச்​சாட்​டு​கள் அனைத்​தும் தவறானவை, ஆதா​ரமற்​றவை. இது​போன்ற செயல்​பாடு நீதித்​துறை​யின் சுதந்​திரத்​துக்கு அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​தும். இதனால், பதவி நீக்​கத் தீர்​மானத்​தின் தகு​தி​களை ஆய்வு செய்​வதைத் தவிர்க்க வேண்​டும்.

எம்​.பி.க்​களில் சிலரின் செயல்​பாடு அரசி​யலமைப்பு அதி​காரங்​களை மீறும் வகை​யிலும், தவறான வகை​யில் பயன்​படுத்​தும் வகை​யிலும் அமைந்​துள்​ளது. அரசி​யலமைப்பு விதி​களை தன்​னிச்​சை​யாகப் பயன்​படுத்த முயல்​வதன் மூலம் இந்​திய நீதித்​துறையைச் சீர்​குலைக்க முயல்​கின்​றனர். இதன் விளை​வாக பதவி நீக்​கத் தீர்​மானம் அளித்​திருப்​ப​தாக நாங்​கள் கருதுகிறோம்.

1.26 லட்சம் வழக்குகள்: நீதிபதி சுவாமி​நாதன் 2017 ஜூன் மாதம் தொடங்கி 2025 நவ. 30 வரை 1.26 லட்​சம் வழக்​கு​களுக்​குத் தீர்​வு​கண்​டுள்​ளார். நீதி வழங்​கு​வ​தில் பாரபட்​சம் இல்​லாமல் நேர்​மை​யுடன் செயல்​பட்டு வரு​கிறார்.

அவர் மீது எந்​தக் குறை​யும் சொல்ல முடி​யாது. நேர்​மை, நாண​யம் மிகுந்த மற்​றும் அறி​வார்ந்த நீதிப​தி​களில் சுவாமி​நாதனும் ஒரு​வர். அவர் மீது அரசி​யல், மத அடிப்​படையி​லான காரணங்​களால் சுமத்​தப்​பட்​டுள்ள, ஆதா​ரமற்ற, தவறான குற்​றச்​சாட்​டு​கள் கவலை​யளிப்​ப​தாக உள்​ளன.

இந்​தக் குற்​றச்​சாட்​டு​கள் அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் அடிப்​படைக் கட்​டமைப்​புக் கோட்​பாடு​களை, குறிப்​பாக நீதித்​துறை​யின் சுதந்​திரத்தை மீறும் முயற்​சி​யாகும். மேலும், இது ஜனநாயகத்​தின் இரண்டு முக்​கி​யத் தூண்​களான நாடாளு​மன்​றம், நீதித்​துறை​யின் லட்​சுமண ரேகையை மீறிய செய​லாகும்.

ஜனநா​யத்​தின் உயர்ந்த கொள்​கைகள், அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் புனிதத்​தன்மை மீது நம்​பிக்​கை​ இல்​லாத சில அரசி​யல் கட்​சிகளின் முயற்​சியே இந்​தப் பதவி நீக்​கத் தீர்​மானம். இந்​தத் தீர்​மானத்தை ஏற்க வேண்​டாம். தொடக்க நிலை​யிலேயே நிராகரித்து சட்​டத்​தின் மாண்​பைப் பாது​காக்க வேண்​டும். இவ்​வாறு கடிதத்​தில் கூறப்​பட்​டுள்​ளது.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்க தீர்மானத்தை தொடக்க நிலையிலேயே நிராகரிக்க வேண்டும்: 154 வழக்கறிஞர்கள் கடிதம்
“என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே..” - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் சவால்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in