பணியின்போது செல்போனில் கவனம் செலுத்தும் போக்குவரத்து காவலர்கள்: நடவடிக்கை என்ன?-அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியின்போது செல்போனில் கவனம் செலுத்தும் போக்குவரத்து காவலர்கள்: நடவடிக்கை என்ன?-அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சிக்னல்களில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் போக்குவரத்து காவலர்கள் மொபைல்களில் பேசிக் கொண்டிருப்பதாகவும், வாட்ஸ் ஆப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இதுசம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து பதிலளிக்கும்படி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகளை விசாரிக்க துவங்கிய போது, தாம் உயர் நீதிமன்றத்திற்கு வரும் வழியில் போக்குவரத்து சிக்னல்களில், போக்குவரத்து காவலர்கள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல், மொபைல் போன்களை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், சிக்னல் விழுந்து வாகனங்கள் புறப்பட்ட போது, சாலை குறுக்கே ஒரு பெண்மணி ஓடிய போதும், அதை போக்குவரத்துக் காவலர்கள் கண்டு கொள்ளாமல், செல்போன்களை பார்த்துக் கொண்டிருந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், எந்த சிக்னல் என கேட்டதற்கு, போக்குவரத்துக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தாம் இதைக் கூறவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, பொதுமக்களின் உயிர், பாதுகாப்பு முக்கியம் எனவும், சென்னை நகரம் முழுவதும் போக்குவரத்து காவலர்கள் பணியாற்றுவதில்லை எனவும், செல்போன்களில் பேசுவது, வாட்ஸ்ஆப் பார்ப்பது என்று தான் இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

இந்த விஷயத்தை டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி, அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, இதுசம்பந்தமாக அவர்கள் எடுத்த நடவடிக்கை குறித்து ஜனவரி 30-ம் தேதி தெரிவிக்கும்படி, உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in