ஓலைப் பெட்டியில் இறைச்சி விற்பனை: முன்மாதிரியான பாளை வியாபாரி

ஓலைப் பெட்டியில் இறைச்சி விற்பனை: முன்மாதிரியான பாளை வியாபாரி
Updated on
1 min read

பாளையங்கோட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக இறைச்சியை ஓலைப்பெட்டியில் வழங்குகிறார் வியாபாரி அப்துல் ரசாக்.

பாளையங்கோட்டை மிலிட்டரிலைன் பள்ளிவாசல் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கறிக்கோழி கடையை நடத்தி வருகிறார் இவர். பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வால், கடந்த 2 ஆண்டுகளாகவே, இறைச்சியை வாழை இலையில் பொதிந்து, பனை ஓலைப்பெட்டியில் வைத்து விற்பனை செய்கிறார். இது, பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அப்துல் ரசாக் கூறும்போது, ``திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு தடைவிதிப்பதாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்திருந்தது. அப்போது, பனை ஓலை பெட்டியில் வைத்து இறைச்சியை வழங்கும் யோச னையை, கெமிக்கல் இன்ஜினி யரான எனது மகன் சாகுல் மீரான் தெரிவித்தார். அப்போது முதல் இவ்வழக்கத்தை பின்பற்று கிறோம். பேட்டையில் இருந்து ஓலைப் பெட்டிகளை கொள்முதல் செய்கிறேன். குளிர் சாதனப் பெட்டி யைப் போன்றது ஓலைப்பெட்டி. அதிலிருக்கும் உணவுப்பொருள் விரைவில் கெட்டுப்போகாது. ஓலைப் பெட்டியை கழுவி வேறு உணவுபொருட்களை வைத்து பாதுகாக்க முடியும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in