ராமேசுவரம் மீனவர்கள் 36-வது நாளாக வேலை நிறுத்தம்

ராமேசுவரம் மீனவர்கள் 36-வது நாளாக வேலை நிறுத்தம்
Updated on
1 min read

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகு களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீன வர்கள் 36-வது நாளாக தொடர்ந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் 100 கோடி ரூபாய்க்கு மேல் அந்நிய செலவாணி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள், இலங்கை கடற்படை யினரால் சிறைபிடிக்கப்பட்ட 62 விசைப்படகுகள், 94 மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர் களுக்கு உறுதிப்படுத்தவும் வலி யுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆக.13-ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ச இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை சிறைகளி லுள்ள மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஆனால் விசைப்படகுகள் விடுவிப்பதைப் பற்றி அறிவிக்கப்படவில்லை. இதனால் ராமேசுவரம் மீனவர்கள் 36-வது நாளாக வியாழக்கிழமையும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை ராமேசுவரம் மீனவப் பிரதிநிதி களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் மீனவப் பிரதிநிதிகள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

‘ராமேசுவரம் மீனவர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தால் அரசுக்கு ரூ.100 கோடிக்கும் மேலான அந்நிய செலாவணி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று இந்திய-இலங்கை நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் நிலையில், மீனவர் பிரச்சினையில் சுமுகத்தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சு வார்த்தைக்குப் பின், அடுத்தகட்ட போராட்டங்களை அறிவிப்போம்’ என ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in