திருப்பத்தூரில் உள்ள மணிமண்டபத்தில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை

திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், சிவ.வீ.மெய்யநாதன், டிஆர்பி.ராஜா உள்ளிட்டோர்.
திருப்பத்தூரில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், சிவ.வீ.மெய்யநாதன், டிஆர்பி.ராஜா உள்ளிட்டோர்.
Updated on
1 min read

திருப்பத்தூர்: மருது சகோ​தரர்​கள் நினைவு தினத்​தையொட்டி திருப்​பத்​தூரில் உள்ள அவர்​களது சிலைகளுக்கு அமைச்​சர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரில் உள்ள மணிமண்​டபத்​தில் மருது சகோ​தரர்​கள் நினைவுதினம் அரசு நிகழ்ச்​சி​யாக நடை​பெற்​றது.

மாவட்ட ஆட்​சி​யர் கா.பொற்​கொடி தேசி​யக் கொடியை ஏற்றி வைத்​து, மருது சகோ​தரர்​கள் சிலைகளுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தி​னார். தொடர்ந்​து, அமைச்​சர்​கள் ஐ.பெரிய​சாமி, கே.ஆர்​.பெரிய கருப்​பன், ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன், பழனிவேல் தியாக​ராஜன், சிவ.வீ.மெய்​ய​நாதன், டி.ஆர்​.பி.​ராஜா ஆகியோர் மருது சகோ​தரர்​கள் சிலைகளுக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர்.

பின்​னர், பேருந்து நிலை​யம் அருகே உள்ள மருது சகோ​தரர்​களின் நினை​வுத் தூணுக்கு மரி​யாதை செலுத்​தினர். இந்த நிகழ்ச்​சிகளில், எம்​எல்​ஏக்​கள் தமிழரசி, மாங்​குடி, எஸ்​.பி. சிவபிர​சாத் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

பின்​னர் அமைச்​சர் கே.ஆர்​. பெரியகருப்​பன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சுதந்​திரப் போராட்ட வீரர்​களின் தியாகத்​தைப் போற்​றும் வகை​யிலும், மொழி, கலாச்​சா​ரம், பண்​பாட்டை பெரு​மைப்​படுத்​தும் வகை​யிலும் மணிமண்​டபம், நினை​வுச் சின்​னங்​களை திமுக அரசு அமைத்து வரு​கிறது. சங்​கரபதி கோட்டை பழமை மாறாமல் புனரமைக்​கப்​பட்டு வரு​கிறது. ஆளுநருக்கு தமிழக வரலாறு குறித்து என்ன தெரி​யும்? இவ்​வாறு அவர் கூறி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in