நோட்டு போட்டு வசூல்: தீயணைப்பு வீரர்கள் 3 பேர் பணியிட மாற்றம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

விருதுநகர்: தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு விருதுநகரில் உள்ள பல்​வேறு கடைகள், தனி​யார் நிறு​வனங்​கள், மரக்​கடைகளில் தீயணைப்​புத் துறை​யினர் நோட்​டுப் போட்டு பணம் வசூல் செய்​வ​தாக விருதுநகர் லஞ்ச ஒழிப்​புப்பிரிவு போலீ​ஸாருக்கு தொடர்ந்து புகார்​கள் வந்​தன. இதையடுத்​து, புகார்​கள் தொடர்​பாக விருதுநகர் தீயணைப்பு வீரர்​கள் ஹரிச்​சந்​திரன், நவநீதகிருஷ்ணன், வினோத் ஆகியோரைப் பிடித்​து, லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் விசா​ரித்​தனர்.

விசா​ரணை​யில், இவர்கள் ரூ.4.94 லட்​சம் வசூல் செய்​தது தெரிய​வந்​தது. தொடர்ந்​து, மூவர் மீதும் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், புகாரில் சிக்​கிய ஹரிச்​சந்​திரன் ராம​நாத​புரம் மாவட்​டம் சாயல்​குடி தீயணைப்பு நிலை​யத்​துக்​கும், நவநீதகிருஷ்ணன் மதுரை மாவட்​டம் மேலூர் தீயணைப்பு நிலை​யத்​துக்​கும், வினோத் தேனி மாவட்​டம் மயி​லாடும்​பாறை தீயணைப்பு நிலை​யத்​துக்​கும் பணி​யிட மாற்​றம் செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in