செயற்கை நுண்ணறிவு பாட பிரிவை தொடங்க வேண்டும்: பல்கலைக்கழங்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

சென்னையில் நடந்த உயர்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கோவி.செழியன், துறை செயலர் பொ.சங்கர், மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் எம்.பி.விஜயகுமார்.
சென்னையில் நடந்த உயர்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கோவி.செழியன், துறை செயலர் பொ.சங்கர், மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் எம்.பி.விஜயகுமார்.
Updated on
1 min read

சென்னை: உயர் கல்​வி​யின் தரத்தை மேலும் உயர்த்​து​வது, திறன்​மிகுந்த மாணவர்​களை உரு​வாக்​கு​வது தொடர்​பான ஆய்​வுக்​கூட்டம் சென்​னை​யில் உள்ள மாநில உயர்​கல்வி மன்​றத்​தில் உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் 13 அரசு பல்​கலைக்​கழகங்​களைச் சேர்ந்த பதி​வாளர்​கள், தேர்​வு​கட்​டுப்​பாட்டு அலு​வலர்​கள் பங்​கேற்​றனர். இதில், பல்​கலைக்​கழகங்​களின் கீழ் நடத்​தப்​படும் பாடப் பிரிவு​களின் செயல்​பாடு​கள் குறித்​தும், மாணவர்​களுக்கு வேலை​வாய்ப்​பு​கள் சிறந்த முறை​யில் கிடைக்​கப்​பெறுகிறதா என்​பது குறித்​தும் உயர்​கல்வி நிறு​வனங்​களில் பாடத்​திட்​டங்​கள் மற்​றும் கேள்​வித்​தாள்​களின் தரம் குறித்​தும் ஆய்வு செய்​யப்​பட்​டது.

மேலும் உயர்​கல்வி மாணவர்​களின் கற்​றல் மேம்​பாடு, மாநில மற்​றும் தேசிய அளவி​லான தொழில்​நுட்ப போட்​டிகளில் தமிழகத்​தைச் சேர்ந்த மாணவர்​களின் பங்​கேற்​பு, வழங்​கப்​பட்டு வரும் பாடப்​பிரிவு​களின் கிரெடிட் கட்​டமைப்​பு, பல்​கலைக்​கழகங்​களின் ஆராய்ச்சி சூழல் பற்​றி​யும் ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.

அப்​போது, செயற்கை நுண்​ணறிவு (AI), இயந்​திரக் கற்​றல் (மெஷின் லேர்​னிங்) போன்ற புதிய பாடப்​பிரிவு​கள் தொடங்​கு​வது, மாணவர்​களின் மொழி​யாற்​றலை மேம்​படுத்​து​வது, வேலை​வாய்ப்​பு​களை உறுதி செய்​யும் வகை​யில் திறன் மேம்​பாட்டு பயிற்​சிகள் வழங்​கு​வது போன்​றவற்​றில் கூடு​தல் கவனம் செலுத்த வேண்​டும் என்று பல்​கலைக்​கழக அதி​காரி​களை அமைச்​சர் கேட்​டுக்​கொண்​டார். கூட்​டத்​தில் உயர்​கல்​வித் துறை​யின் செயலர் பொ.சங்​கர், மாநில உயர்​கல்வி மன்​றத் துணைத்தலை​வர் எம்​.பி.​விஜயகு​மார், உறுப்​பினர்- செயலர் டி.வேல்​ முரு​கன் கலந்​து ​கொண்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in