சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி பெருமிதம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். உடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் கணபதி,  பிரபாகர ராஜா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். உடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் கணபதி, பிரபாகர ராஜா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் கடந்த ஓராண்​டில் மட்​டும் 1.40 லட்​சம் பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத் துறை சார்​பில் பயனாளி​களுக்கு வீட்​டுமனைப் பட்டா வழங்​கும் நிகழ்ச்சி சென்னை காரம்​பாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை வகித்து 1,600 பயனாளி​களுக்கு வீட்​டுமனைப் பட்​டாக்​களை வழங்​கி​னார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: உணவு, உடை, இருப்​பிடம் இவை 3-ம்​தான் ஒவ்​வொரு மனிதனுக்கு அடிப்​படைத் தேவை​கள். இதில் உடை, உணவு எல்​லோருக்​கும் கிடைத்​து​விடும். ஆனால், குடி​யிருக்​கும் இடம் பட்​டாவுடன் வேண்​டும் என்​பது​தான் இன்​றைக்கு இருக்​கும் மிகப்​பெரிய பிரச்​சினை.

வீட்​டுக்​குப் பட்டா இல்லை என்​றால், அதனால் ஏற்​படும் வேதனையைப் பட்​டியலிட முடி​யாது. மின் இணைப்பு வாங்க முடி​யாது. தண்​ணீர் இணைப்பு அவ்​வளவு எளி​தாகக் கிடைத்​து​வி​டாது. வங்​கிக் கடன் கிடைப்​பது கடினம். எப்​போது யார் வந்து இடத்​தைக் காலி செய்​யச் சொல்​வார்​களோ என்ற பதற்​றம் கூடு​தலாக இருக்​கும்.

எனவே, சென்னை மற்​றும் அதைச் சுற்றி இருக்​கும் பகு​தி​களில் குடி​யிருக்​கும் மக்​களுக்கு உடனடி​யாகப் பட்டா வழங்க வேண்​டும் என முதல்​வர் உத்​தர​விட்​டார். இதற்​காக வரு​வாய்த் துறை அமைச்​சர் தலை​மை​யில் ஒரு குழு அமைக்​கப்​பட்​டது. அந்​தக் குழு​வின் பரிந்​துரைப்​படி கடந்த ஒராண்​டில் மட்​டும் சென்னை மாவட்​டத்​தில் 1.40 லட்​சம் பயனாளி​களுக்கு பட்டா வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதே​போல், திமுக அரசு பொறுப்​பேற்​றது முதல் தமிழகம் முழு​வதும் 19 லட்​சம் பட்​டாக்​கள் வழங்​கப்​பட்​டிருக்​கின்​றன. இவ்​வாறு பல முற்​போக்​கான திட்​டங்​களின் மூலம், இந்​தி​யா​விலேயே நம்​முடைய மாநிலம் 11.19 சதவீத வளர்ச்​சி​யோடு முதலிடத்​தைப் பிடித்திருக்​கிறது.

இதனால் திமுக அரசுக்கு ஒவ்​வொரு நாளும் மக்​களு​டைய அன்​பும், ஆதர​வும் பெரு​கிக்​கொண்​டிருக்​கிறது. அரசைத் தேடி மக்​கள் வரவேண்​டும் என்ற நிலை​மையை மாற்​றி, இன்​றைக்கு மக்​களைத் தேடி அரசு வந்து கொண்​டிருக்​கிறது. இவ்​வாறு அவர் பேசினார்.

இந்​நிகழ்​வில், அமைச்​சர்​கள் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர்​.​ராமச்​சந்​திரன், சு.​முத்​து​சாமி, மா.சுப்​பிரமணி​யன், மேயர் பிரி​யா, தமிழ்​நாடு வீட்டு வசதி வாரி​யத் தலை​வர் பூச்சி எஸ்​.​முரு​கன், வரு​வாய்த் துறை செயலர் பெ.அ​மு​தா, நில அளவை மற்​றும் நில​வரித் திட்ட இயக்​குநர் தீபக் ஜேக்​கப், தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரிய மேலாண்மை இயக்​குநர் கணேசன், மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in