டாஸ்மாக் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் அக்.28-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

டாஸ்மாக் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் அக்.28-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Published on

சென்னை: ​டாஸ்​மாக் பணி​யாளர்​கள் கால​வரையற்ற காத்​திருப்பு போராட்​டம் அக்​.28-ம் தேதி்க்கு ஒத்​திவைக்​கப்​படு​வ​தாக, டாஸ்மாக் பணி​யாளர் சங்​கம் அறி​வித்​துள்​ளது. தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர் சங்​கத்​தின் மாநில நிர்​வாகக் குழுக் கூட்​டம் தலை​வர் பெரிய​சாமி தலை​மை​யில் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​தில் ஏஐடியூசி தேசிய செய​லா​ளர் மூர்த்​தி, டாஸ்​மாக் பணி​யாளர் சங்க பொதுச் செய​லா​ளர் தனசேகரன், பொருளாளர் கோவிந்​த​ராஜன் மற்​றம் நிர்​வாகக்​குழு உறுப்​பினர்​கள் கலந்து கொண்​டனர்.

தமிழ்​நாடு டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சங்​கம் பணி நிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை முன் வைத்து அக்.2 ம் தேதி தலை​மைச் செயல​கம் முன்பு கால​வரையற்ற போராட்​டம் மற்​றும் விதிப்​படி பணி செய்​யும் இயக்​கத்தை அறி​வித்​திருந்​தது. கடந்த 26ம் தேதி டாஸ்​மாக் மேலாண்மை இயக்​குநருடன் நடை​பெற்ற பேச்சு வார்த்​தை​யில் முடிவு எட்​டப்​ப​டாத நிலை​யில், அமைச்​சர் முத்​து​சாமி சங்க நிர்​வாகி​களை தொடர்பு கொண்டு கோரிக்​கைகள் தொடர்​பாக பேசி தீர்வு காணலாம் என தெரி​வித்​தார்.

அமைச்​சருடன் பேசி தீர்வு காண அவகாசம் அளிக்​கும் முறை​யில் அறிவிக்​கப்​பட்​டிருந்த கால​வரையற்ற காத்​திருப்பு போராட்​டத்தை அக்​.28-ம் தேதிக்கு ஒத்​திவைப்​பது என மாநில நிர்​வாகக் குழு கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது. மேலும் இந்த கூட்​டத்​தில், அக்​.28-ம் தேதி போராட்​டத்தை வெற்​றிகர​மாக நடத்​து​வதற்​கான ஆயத்​தப் பணி​களை மாவட்ட நிர்​வாகி​கள் தொடர்ந்து முனைப்​புடன் மேற்​கொள்ள வேண்​டும்.

பொது​மக்​களிடம் துண்​டறிக்கை விநி​யோகித்து ஆதரவு திரட்​டு​வது, டாஸ்​மாக் பணி​யாளர்​களின் கோரிக்​கை​களின் நியா​யங்​களை பொது​மக்​களிடம் விளக்​கிக் கூறி, ஆதரவு திரட்​டும் வகை​யில் துண்​டறிக்கை விநி​யோகம் செய்​வது என்ற முடிவு செய்​யப்​பட்​டது. மேலும், தமிழ்​நாடு அரசு தொழிலா​ளர் கொள்கை வெளி​யிட வலி​யுறுத்தி தமிழ்​நாடு ஏஐடியூசி மேற்​கொள்​ளும் ஆர்ப்​பாட்​டத்​தில் டாஸ்​மாக் பணி​யாளர்​களை திரட்டி பங்​கேற்​பது என முடிவு செய்​யப்பட்டது​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in