10 கட்சிகள் 3 ஆண்டுகளாக தணிக்கை கணக்கு தாக்கல் செய்யவில்லை: விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

10 கட்சிகள் 3 ஆண்டுகளாக தணிக்கை கணக்கு தாக்கல் செய்யவில்லை: விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்
Updated on
1 min read

சென்னை: பு​திய தமிழகம் உள்ளிட்ட 10 கட்​சிகள் 3 ஆண்​டு​களாக வரு​டாந்​திர தணிக்கை செய்​யப்​பட்ட கணக்​கு​களை தாக்​கல் செய்​யாத நிலை​யில், அக்​கட்​சிகளிடம் தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் கேட்​டுள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவதுபதிவு செய்​யப்​பட்ட அரசி​யல் கட்​சிகள் வரு​டாந்​திர தணிக்கை செய்​யப்​பட்ட கணக்​கு​களை தேர்​தல் ஆணை​யத்​திடம் சமர்ப்​பிக்க வேண்​டும். சென்னை மாவட்​டத்​தில் பதிவு செய்​யப்​பட்ட அனைத்​திந்​திய எம்​.ஜி.ஆர். மக்​கள் முன்​னேற்​றக் கழகம், கிறிஸ்தவ ஜனநாயக முன்​னணி, ஜெபமணி ஜனதா, காம​ராஜர் தேசிய காங்​கிரஸ், மக்​கள் சக்தி கட்​சி, என் இந்​தியா கட்​சி, புதிய தமிழகம், இந்​திய குடியரசுக் கட்சி (சிவ​ராஜ்), தமிழக முன்​னேற்ற காங்​கிரஸ், வளமான தமிழக கட்சி ஆகிய 10 அரசி​யல் கட்​சிகள் 2021-22, 2022-23 மற்​றும் 2023-24 ஆகிய நிதி​யாண்​டு​களுக்​கான வரு​டாந்​திர தணிக்கை செய்​யப்​பட்ட கணக்​கு​களை நிர்​ண​யிக்​கப்​பட்ட காலத்​துக்​குள் சமர்ப்​பிக்​க​வில்​லை.

நேரடி விசாரணை: இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் பதிவு​களின்​படி, சம்​பந்​தப்​பட்ட 10 கட்​சிகள் தேர்​தல் செல​வின அறிக்கைகளை உரிய படிவத்​தில் சமர்ப்​பிக்​க​வில்​லை. எனவே, அந்த கட்​சிகளை பதிவு செய்​யப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் பட்டியலில் இருந்து நீக்க இந்​திய தேர்​தல் ஆணை​யம் உத்தேசித்​துள்​ளது. எனினும், அதற்கு முன்​பாக 10 கட்​சிகளுக்கு தங்​கள் கருத்தை தெரிவிக்க ஒரு வாய்ப்பு அளிக்​கும் வித​மாக தமிழக தலை​மைத் தேர்​தல் அலு​வலர் மூல​மாக நேரடி விசா​ரணை நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

எனவே, மேற்​குறிப்​பிட்ட கட்​சிகள் எழுத்​துப்​பூர்​வ​மான அறிக்கை மற்​றும் உரிய ஆவணங்​களு​டன் தமிழக தலை​மைத் தேர்​தல் அலுவலர் முன் ஆஜராக வேண்​டும். குறிப்​பிட்ட தேதிக்​குள் கட்​சிகளிட​மிருந்து எந்த பதி​லும் வரவில்​லையெனில், இறுதி முடிவை இந்திய தேர்​தல் ஆணை​யம் பிறப்​பிக்​கும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in