தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.10,000 கோடி கொடுத்தாலும் கொள்கையில் மாறமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து

தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.10,000 கோடி கொடுத்தாலும் கொள்கையில் மாறமாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து
Updated on
1 min read

நாகப்பட்டினம்: மத்​திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்​தா​லும், எங்​கள் கொள்​கை​யில் இருந்து மாற​மாட்​டோம் என்று தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி கூறி​னார்.

தமிழகத்​தில் பள்​ளிக்​கல்​வித் துறையை மேம்​படுத்​தும் நோக்​கில் வெற்​றிப் பள்​ளி​கள் திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. முதல்​கட்​ட​மாக நடப்​பாண்டு 236 வட்​டாரங்​களில் 369 பள்​ளி​கள் வெற்​றிப் பள்​ளி​களாக மாற்​றப்​பட்​டுள்​ளன. அதற்​கான தொடக்க விழா நாகை நகராட்சி பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்​றது.

தலைமை வகித்து அமைச்​சர் அன்​பில் மகேஸ் பேசி​ய​தாவது: 43 லட்​சம் தமிழக மாணவர்​கள், 32 ஆயிரம் ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் அல்​லாத பணி​யாளர்​களுக்கு கிடைக்க வேண்​டிய ரூ.2,152 கோடி நிதியை மத்​திய அரசு தரவில்​லை. நிதியை கொடுக்​காமல் சில கொள்​கைகளை (மும்​மொழி கொள்கை) ஏற்​றுக் கொள்​ளு​மாறு வற்​புறுத்​துகின்​றனர். அதை ஏற்க வேண்​டிய அவசி​யம் எங்​களுக்கு இல்​லை. ரூ.2 ஆயிரம் கோடி அல்ல, ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்​தா​லும்​கூட, எங்​கள் கொள்கை மாறாது.

எங்​கள் பிள்​ளை​களின் கல்விக்கு தடை​யாக இருக்​காதீர்​கள். தயவு செய்து ஒதுங்கி கொள்​ளுங்​கள். எங்​கள் பிள்​ளை​கள் எல்​லாம் மேலே வந்து கொண்​டிருக்​கிறார்​கள். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்நிகழ்ச்​சி​யில், நாகை எம்​.பி.செல்​வ​ராஜ், எம்​எல்ஏ நாகை மாலி, தமிழ்​நாடு மீன் வளர்ச்சி கழகத் தலை​வர் கவுதமன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in