கோப்புப் படம்
கோப்புப் படம்

அறிஞர் அண்​ணா​ பிறந்​த​நாளையொட்டி சென்னையில் நாளை மாரத்தான், மிதிவண்டி போட்டிகள்

Published on

சென்னை: சென்​னை​யில் அறிஞர் அண்ணா மாரத்​தான் மற்​றும் மிதிவண்டி போட்​டிகள் நாளை தொடங்​கு​வ​தாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மறைந்த முதல்​வர் அண்​ணா​வின் பிறந்​த​நாளையொட்டி சென்னை மாவட்ட அளவி​லான அறிஞர் அண்ணா மாரத்​தான் மற்​றும் மிதிவண்டி போட்​டிகள் சென்னை சிவானந்தா சாலை​யில் நாளை (செப்​.27) நடை​பெறுகின்​றன. இதில் மாரத்​தான் போட்​டிகள் காலை 5.30 மணிக்​கும், மிதிவண்டி போட்​டிகள் காலை 7 மணிக்​கும் தொடங்குகின்றன.

சிவானந்தா சாலை​யில் உள்ள தூர்​தர்​ஷன் தொலைக்​காட்சி நிலை​யம் அருகே தொடங்​கும் போட்​டிகள் நேப்​பியர் பாலம், தீவுத்​திடல், காயிதே மில்​லத் பாலம் இடதுபுறம் திரும்பி அண்​ணா​சாலை வழி​யாக மீண்​டும் சிவானந்தா சாலை​யில் தூர்​தர்​ஷன் தொலைக்​காட்சி நிலை​யத்​தில், போட்டி தொடங்​கிய இடத்​திலேயே முடிவடை​யும்.

மிதிவண்டி போட்​டிகள் 13, 15, 17 வயதுக்​குட்​பட்ட மாணவ, மாணவி​களுக்​காக 3 பிரிவு​களி​லும், மாரத்​தான் போட்​டிகள் 17 முதல் 25 வயதுக்​குட்​பட்​ட​வர்​களுக்​கும், 25 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​களுக்​கும் என 2 பிரிவு​களி​லும் நடத்​தப்​படு​கின்​றன. ஒவ்​வொரு பிரி​விலும் முதலிடம் பெறு​பவர்​களுக்கு ரூ.5000, 2-ம் இடம் பெறு​பவர்​களுக்கு ரூ.3000, 3-ம் இடம் பெறு​பவர்​களுக்கு ரூ.2000 மற்​றும் 4 முதல் 10 இடங்​களில் வருபவர்​களுக்கு ரூ.250 பரிசுத் தொகை​யாக வழங்​கப்​படும். கூடு​தல் விவரங்​களுக்கு 7401703480 என்ற செல்​போன் எண்ணை தொடர்பு கொள்​ளலாம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in