உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்

உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு உறுப்பு மாற்று ஆணை​யத்​தின் சார்​பில் உறுப்பு தான தினம்​-2025 நிகழ்ச்சி சென்​னை​யில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பு கொடை​யாளர் குடும்​பத்​தினருக்கு சிறப்பு செய்​து, உறுப்பு மாற்று சிகிச்​சை​யில் சிறப்​பாக பணியாற்றிய மருத்​து​வர்​களுக்கு அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் விருதுகள் வழங்​கி​னார்.

தொடர்ந்​து, வரு​டாந்​திர அறிக்கை மற்​றும் மேம்​படுத்​தப்​பட்ட செயலி விடியல் 2.0 ஆகியவற்றை வெளி​யிட்​டு, உறுப்பு கொடையாளர்​களுக்கு மலரஞ்​சலி மற்​றும் இசையஞ்​சலி செலுத்​தி​னார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்​சர் கூறிய​தாவது: கடந்த 2008-ம் செப்​.5-ம் தேதி மூளைச்​சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை அன்​றைய முதல்​வர் கருணாநிதி தொடங்கி வைத்​தார்.

2008-ம் ஆண்டு முதல் தற்​போது வரை 2,242 பேர் உடலுறுப்பு கொடை​யாளர்​களாக இருந்​துள்​ளனர். இந்த 2,242 பேரின் உடலுறுப்பு தானத்​தின் மூலம் 8,017-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் பல்​வேறு வகை​களில் பயன்​பெற்​றுள்​ளனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in