கடந்த 6 ஆண்டுகளாக வேட்பாளர்களை நிறுத்தாத காரணத்தால் மமக, கொமதேக உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவு ரத்து

கடந்த 6 ஆண்டுகளாக வேட்பாளர்களை நிறுத்தாத காரணத்தால் மமக, கொமதேக உள்ளிட்ட 42 கட்சிகளின் பதிவு ரத்து
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் கடந்த 6 ஆண்​டு​களாக வேட்​பாளர்​களை நிறுத்​தாத மமக, கொமதேக உள்​ளிட்ட 42 அரசி​யல் கட்​சிகளின் பதிவை இந்​திய தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்​துள்​ளது.

மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டம் 1951, பிரிவு 29–ன்​கீழ் தேர்​தல் ஆணை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட ஒரு கட்​சி, வரு​மானவரி விலக்​கு, பொதுதேர்​தல் சின்​னங்​கள் ஒதுக்​கீட்​டில் முன்​னுரிமை, சின்​னங்​கள் ஒதுக்​கீடு, நட்​சத்​திர பிரச்​சார நியமனம் ஆகிய சலுகைகளை பெற முடி​யும். பதிவு செய்​யப்​பட்ட கட்​சி​யானது மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டபடி தேர்​தல் ஆணை​யத்​தால் நடத்​தப்​படும் தேர்​தல்​களில் வேட்​பாளர்​களை நிறுத்த வேண்​டும். பல கட்​சிகள், தேர்​தல்ஆணை​யத்​தால் நடத்தப்​படும்பொதுத்தேர்​தல்​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தாதது தேர்​தல் ஆணை​யத்​தின் கவனத்​துக்கு வந்​தது.

இக்​கட்​சிகள் தேர்​தலில் போட்​டி​யி​டா​மல், பதிவு செய்​யப்​பட்ட கட்​சிகளுக்கு வழங்​கப்​படும் வரு​மானவரி விலக்கு உள்​ளிட்ட சலுகைகளை மட்​டும் அனுப​வித்து வரு​வது தெரிய​வந்​தது. பல கட்​சிகள், பதிவு செய்த முகவரி​யில் கட்சி அலு​வல​கம் கூட வைக்​காமல் செயல்​பட்டு வந்​த​தாக கூறப்​படு​கிறது. மேலும் இக்​கட்​சிகள் ஆண்டு வரவு, செலவு கணக்​கை​யும் தேர்​தல் ஆணை​யத்​தில் தாக்​கல் செய்​ய​வில்லை என கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்​டு​கள் தேர்​தலில் போட்​டி​யி​டாத, பதிவு செய்​யப்​பட்ட, அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​சிகளின் பதிவை ரத்து செய்ய தேர்​தல் ஆணை​யம் முடிவு செய்​திருந்​தது. அதனைத் தொடர்ந்​து,தொடர்ந்து 6 ஆண்​டு​களாக பொதுத்​தேர்​தல்​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தாத பதிவு செய்​யப்​பட்ட கட்​சிகளை கண்​டறிந்​து, அவற்​றிடம் உரிய விளக்​கம் கேட்​டு, அது தொடர்​பான அறிக்​கையை தேர்​தல் ஆணை​யத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும் என்று அனைத்து மாநில தலைமை தேர்​தல் அதி​காரி​களுக்​கும் தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டிருந்​தது.

அதன்​படி நாடு முழு​வதும் கடந்த 6 ஆண்​டு​களாக தேர்​தல்​களில் வேட்​பாளர்​களை நிறுத்​தாக 474 கட்​சிகள் அடை​யாளம் காணப்​பட்​டு, ஏன் இந்த கட்​சிகளின் பதிவை ரத்து செய்​யக்​கூ​டாது என மாநில தலைமை தேர்​தல் அதி​காரி​கள், மாவட்ட தேர்​தல் அதி​காரி​கள் மூல​மாக விளக்​கம் கேட்​டிருந்​தனர். அந்த விளக்​கங்​களை பரிசீலித்து அவர்​கள் தலைமை தேர்​தல் ஆணை​யத்​துக்கு அறிக்கை தாக்​கல் செய்​திருந்​தனர். அதனடிப்​படை​யில் நாடு முழு​வதும் 474 பதிவு செய்​யப்​பட்ட, அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​சிகளின் பதிவை தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்​துள்​ளது. இதன்​படி, தமிழகத்​தில் மட்​டும் 42 கட்​சிகளின் பதிவு ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது.

இதில், எம்​எல்ஏ ஜவாஹிருல்லா தலை​வ​ராக உள்ள மனிதநேய மக்​கள் கட்​சி, எம்​எல்ஏ ஈ.ஆர்​.ஈஸ்​வரனின் கொங்​கு​நாடு மக்​கள் தேசிய கட்​சி, என்​.ஆர்​.தன​பாலனின் பெருந்​தலை​வர் மக்​கள் கட்​சி, ஜான் பாண்​டியனின் தமிழக மக்​கள் முன்​னேற்ற கழகம், தமி​முன் அன்​சா​ரி​யின் மக்​கள் ஜனநாயக கட்​சி, எர்​ணாவூர் நாராயணனின் சமத்​துவ மக்​கள் கழகம், ஸ்ரீதர் வாண்​டை​யாரின் மூவேந்​தர் முன்​னேற்​றக் கழகம் உள்​ளிட்ட கட்​சிகள் இடம்​பெற்​றன. இதில் ஜவாஹிருல்​லா, ஈ.ஆர்​.ஈஸ்​வரன் ஆகியோர் தொடர்ந்து தி​முக சின்​னத்​தில் போட்​டி​யிட்​டு வெற்​றி​பெற்​று வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in