சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுகலை மருத்துவ படிப்புகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

சூப்பர் ஸ்பெஷாலிட்டி முதுகலை மருத்துவ படிப்புகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சூப்​பர் ஸ்பெஷாலிட்டி முதுகலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான கலந்​தாய்வை 4 வாரங்களில் நடத்த வேண்​டுமென தேசிய மருத்​துவ ஆணை​யத்​துக்​கும், தமிழக அரசுக்​கும் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக முதுகலை மருத்​து​வம் படித்​துள்ள மருத்​து​வர்​களான நவநீதம், அஜி​தா, ப்ரீத்தி உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் உள்ள 5 ஆயிரம் சூப்​பர் ஸ்பெஷாலிட்டி எனப்​படும் சிறப்பு முதுகலை மருத்​துவ படிப்​பு​களில் சேர தேர்வு செய்​யப்​பட்ட பலர் முதுகலைப்​படிப்​பில் சேர​வில்​லை.

இதனால் தற்​போது நாடு முழு​வதும் 600 காலி​யிடங்​கள் உரு​வாகி அந்த இடங்​கள் நிரப்​பப்​ப​டா​மல் உள்​ளன. தமிழகத்​தைப் பொருத்​தமட்​டில் சிஎம்​சி, ஸ்டான்​லி, மதுரை என சிறந்த மருத்​துவ கல்​லூரி​களில் 40 இடங்​கள் காலி​யாக உள்​ளன. இதனை நிரப்​பா​விட்​டால் அவை யாருக்​கும் பயன்​ப​டா​மல் போய்​விடும். எனவே இந்த இடங்​களுக்​கும் மீண்​டும் மூன்​றாவது முறை​யாக கலந்​தாய்வு நடத்தி அந்த இடங்​களை பூர்த்தி செய்ய மத்​திய அரசுக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கோரி​யிருந்​தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வாதிடும்போது இது​போன்ற மருத்​துவ படிப்​பு​கள் வீணாகி​விடக்​கூ​டாது என உச்ச நீதி​மன்​ற​மும் வலி​யுறுத்​தி​யுள்​ளது. எனவே தகு​தி​யான மாணவர்​களைக் கொண்டு அந்த இடங்​களை நிரப்ப
கோரப்பட்டது.

அதையேற்ற நீதிப​தி, சூப்​பர் ஸ்பெஷாலிட்டி முதுகலை மருத்​துவ படிப்​பு​களில் தமிழகம் முழு​வதும் காலி​யாக உள்ள மருத்​துவ இடங்​களுக்கு 4 வார காலத்​துக்​குள் கலந்​தாய்வு நடத்தி அந்த இடங்​களை பூர்த்தி செய்ய வேண்​டும் என தேசிய மருத்​துவ ஆணை​யத்​துக்​கும்​, தமிழக அரசுக்​கும்​ உத்​தர​விட்​டுள்​ளார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in