‘ககன்யான்’ திட்ட சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவு: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்

‘ககன்யான்’ திட்ட சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவு: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்
Updated on
1 min read

கோவை: மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்​பும் ‘ககன்​யான்’ திட்​டத்​தின் சோதனை பணி​கள் 85 சதவீதம் நிறைவடைந்​துள்​ள​தாக இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்​ரோ) தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்​பும் ‘ககன்​யான்’ திட்​டத்​தில் கவனம் செலுத்தி வரு​கிறோம். இந்த திட்​டம் 2018-ல் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வித்த திட்​டம்.

இவ்​வாண்டு ஆளில்லா விண்​கலத்​தில் ‘வயோமித்​ரா’ என்ற இயந்​திர மனிதனை அனுப்ப உள்​ளோம். டிசம்​பர் மாத இறு​தி​யில் இந்​நிகழ்வு நடை​பெறும். தொடர்ந்​து, இரண்டு ஆளில்லா ராக்​கெட்​களை அனுப்​ப​வும், 2027 மார்ச் மாதம் மனிதர்​களை அனுப்​ப​வும் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

‘ககன்​யான்’ திட்​டத்​தில் 85 சதவீத சோதனைப் பணி​கள் நிறைவு பெற்​றுள்​ளன. மனிதர்​களை அனுப்​புவதற்கு பல்​வேறு கட்ட சோதனை​கள் மேற்​கொள்ள வேண்​டும். ராக்​கெட்​டில் விபத்து ஏற்​பட்​டால் மனிதர்​களை பாது​காப்​பாக அழைத்து வரு​வது குறித்​தும் ஆய்வு செய்து வரு​கிறோம். இஸ்ரோ மட்​டுமின்றி கடற்​படை, வானியல் துறை உள்​ளிட்ட பல்​வேறு துறை​யினர் இத்​திட்​டத்​தில் இணைந்து செயல்​படு​கின்​றனர்.

செயற்கை நுண்​ணறி​வுத் தொழில்​நுட்​பம் (ஏஐ) விண்​வெளித் துறை​யிலும் வந்​து​விட்​டது. ‘சந்​திர​யான் 4’ நிலா​வில் மாதிரி​களை எடுத்து வரு​வ​தி​லும் ‘ஏஐ’ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்த உள்​ளோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in