சிம்பொனிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தேன்: தமிழக அரசு பாராட்டு விழாவில் இளையராஜா உருக்கம்

சிம்பொனிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தேன்: தமிழக அரசு பாராட்டு விழாவில் இளையராஜா உருக்கம்
Updated on
2 min read

சென்னை: சிம்பொனி இசைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் இளையராஜா உருக்கமுடன தெரிவித்தார்.

தமிழக அரசு சார்​பில், இசை​ஞானி இளை​ய​ராஜா​வின் இசை பயண பொன்​விழா ஆண்​டையொட்டி 'ராஜா​வைத் தாலாட்​டும் தென்​றல்' என்ற தலைப்​பில் பாராட்டு விழா சென்னை நேரு உள் விளை​யாட்​டரங்​கில் நேற்று முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில் பங்கேற்றோர் பேசியதாவது:

நடிகர் ரஜினி​காந்த்: சிம்​பொனிக்​காக லண்​டன் செல்​லும் முன்​பும் சென்னை திரும்​பியதும் அரசு மரி​யாதை​யுடன் இளை​ய​ராஜாவை வாழ்த்தி வரவேற்​றார் முதல்​வர் ஸ்டா​லின். நான் கண்​ணால் பார்த்த அதிசய மனிதர் இளை​ய​ராஜா தான். உலகத்​தில் வாழும் தமிழர்​களின் ரத்​தம், நாடி, நரம்​பு​களில் எல்​லாம் இளை​ய​ராஜா​வின் இசை​யும், பெயரும் ஊறிப் போயிருக்​கிறது.

1980-களில் அவர் இசைத்த பாடல்​கள் இரண்​டை, இப்​போது வெளி​யாகும் திரைப்​படங்​களில் சேர்த்​தால் அந்த படம் ஹிட் ஆகி​விடும். அவர் இசை பயணத்​தின்​போது, புதிய இசை அமைப்​பாளர்​கள் வரு​கிறார்​கள். இளை​ய​ராஜாவை வைத்து கோடி கோடி​யாக சம்​பா​தித்த இயக்​குநர்​கள், தயாரிப்​பாளர்​கள், நான் உள்பட எல்​லோரும் அந்த பக்​கம் சாய்​கிறார்​கள். அதைப்​பற்றி அவர் கொஞ்​ச​மும் கவலைப்​பட​வில்​லை. உண்​மை​யாக, நியாய​மாக,கடின​மாக உழைத்​தால் எல்​லாமே பின்​னால் வரும். அவருடன் பழகியது எனக்கு கிடைத்த மிகப்​பெரிய பாக்​கி​யம்.

நடிகர் கமல்​ஹாசன்: இளை​ய​ராஜா எனக்கு அண்​ணன் போன்​றவர். எங்​கள் இரு​வருக்​கு​மான 50 ஆண்டு கால உறவை எண்ணி மகிழ்​கிறேன். அவருக்கு பாராட்டு விழாவை முன்​னெடுத்த முதல்​வர் ஸ்டா​லினுக்கு நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். (தொடர்ந்து ஹேராம் படத்​தில் வரும் ‘நீ பார்த்த பார்​வைக்கு ஒரு நன்​றி’ எனும் பாடலின் மெட்​டுக்கு இளை​ய​ராஜாவை போற்றி ஒரு பாடலை​யும் கமல்​ஹாசன் பாடி​னார்.)

துணை முதல்​வர் உதயநி​தி: தமிழகத்​தின் அழிக்க முடி​யாத அடை​யாளங்​களில் ஒன்று இசை​ஞானி இளை​ய​ராஜா. 1988-ல் ‘இசை​ஞானி' என்ற பட்​டத்தை முன்​னாள் முதல்​வர் கருணாநிதி வழங்​கி​னார். அவர் பாடல் இல்​லாமல் நம் வாழ்க்கை இல்​லை. இசை அமைப்​பாளர்​ என்​று சொல்​வதை​விட இசை மருத்​து​வர்​ என்​றே கூறலாம்​.

​விழா​வில் ஏற்​புரையாற்றி இளையராஜா பேசி​ய​தாவது: இசை உலக வரலாற்​றிலேயே முதல் முறை​யாக ஒரு இசை அமைப்​பாள​ருக்கு பாராட்டு விழா நடத்​து​வது தமிழக அரசு தான். முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அவர்​கள், நான் சிம்​பொனி இசை அரங்​கேற்​றம் செய்​யப்​போகிறேன் என்ற உடன் அதற்கு முதல்​நாளே வந்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்​பி​னார். லண்​டனில் இருந்து திரும்பி வந்​த​போது அரசு சார்​பில் வரவேற்​றார். தற்​போது பாராட்டு விழா​வும் நடத்​தி​விட்​டார். இதை என்​னால் நம்ப முடிய​வில்​லை.

என்​மேல் அவ்​வளவு அன்பு வைப்​ப​தற்கு என்ன காரணம், இசை​தா​னா, அவரது அப்பா முன்​னாள் முதல்​வர் கருணாநிதி சூட்​டிய இசை​ஞானி என்ற பட்​டமே எனக்கு பேராகி​விட்​டது. அரசு சார்​பில் எந்த இசைக்​கலைஞனுக்​கும் பராட்டு விழா நடந்​தது இல்​லை. இது இசை உலகின் சரித்​திர​மாக கருதுகிறேன். இதை என்​னால் இன்​னும் நம்ப முடிய​விலலை. என்ன பேச வேண்​டும் என்​பதே மறந்​து​விட்​டது. இசை​யிலலேயே என் வாழ்க்கை முழு​வதும் சென்​றது. என்​னுடைய குழந்​தைகளுக்​காக நான் நேரம் செல​வழிக்​க​வில்​லை.

அப்​படி நேரம் செல​வழித்​திருந்​தால் இந்த சிம்​பொனியை அமைத்​திருக்க முடி​யாது. இதே​போல நீங்​கள் விரும்பி கேட்​கின்ற அவ்​வளவு பாடல்​களை​யும் கம்​போஸ் செய்​திருக்க முடி​யாது. அதனால், நான் எனது பிள்​ளை​களுக்கு நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன். சிம்​பொனி அமைக்​கும்​போது எந்த சாயலும் இருக்​கக் கூடாது. அதை​யும் மீறி 35 நாட்​களில் இந்த சிம்​பொனியை அமைத்​திருக்​கிறேன். சிம்​பொனிக்​காக எனது வாழ்க்​கையை அர்ப்​பணித்​தேன். சிம்​பொனி இசையை பெரிய மைதானத்​தில் நடத்த தேவை​யான உதவி​களை முதல்​வர்​ செய்​ய வேண்​டும்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in