அம்ரித் பாரத் நிலையம் திட்டம்: செங்கல்பட்டு ரயில் நிலைய மேம்பாட்டுப் பணியை பிப்ரவரிக்குள் முடிக்க திட்டம்

அம்ரித் பாரத் நிலையம் திட்டம்: செங்கல்பட்டு ரயில் நிலைய மேம்பாட்டுப் பணியை பிப்ரவரிக்குள் முடிக்க திட்டம்
Updated on
1 min read

சென்னை: அம்​ரித் பாரத் நிலை​யம் திட்​டத்​தின் கீழ், செங்​கல்​பட்டு ரயில் நிலை​யத்​தில் தற்​போது வரை 80 சதவீதம் பணி​கள் முடிக்​கப்​பட்​டுள்​ளன. அனைத்து பணி​களும் அடுத்த ஆண்டு பிப்​ர​வரிக்​குள் முடிக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக, சென்னை ரயில்வே கோட்ட அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

அம்​ரித் பாரத் நிலைய திட்​டத்​தின் கீழ், சென்னை ரயில்வே கோட்​டத்​தில் பெரம்​பூர், திரு​வள்​ளூர், அரக்​கோணம், திருத்​தணி, ஜோலார்​பேட்​டை, கும்​மிடிப்​பூண்​டி, கூடு​வாஞ்​சேரி, சூலூர்​பேட்​டை, செங்​கல்​பட்​டு, அம்​பத்​தூர், பரங்​கிமலை, கிண்​டி, மாம்​பலம், சென்னை பூங்​கா, சென்னை கடற்​கரை, குரோம்​பேட்​டை, திரிசூலம் ஆகிய 17 நிலை​யங்​களில் மேம்​படுத்த முடிவு செய்யப்பட்டது.

முதல்​கட்​ட​மாக சூலூர்​பேட்​டை, பரங்​கிமலை ரயில் நிலை​யங்​கள் மேம்​படுத்​தப்​பட்​டு, கடந்த மே மாதம் பயன்​பாட்​டுக்கு வந்​தன. தற்​போது, சென்னை ரயில்வே கோட்​டத்​தில், 15 ரயில் நிலை​யங்​களில் மேம்​பாட்​டுப் பணி​கள் நடை​பெறுகின்​றன. அதன்​படி, செங்​கல்​பட்டு ரயில் நிலை​யத்​தில் ரூ.14.7 கோடி​யில் மேம்​பாட்​டுப்​பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன. புதிய நிர்​வாகக் கட்டிடம், மக்​கள் கூடும் பகுதி மற்​றும் டிக்​கெட் கவுன்ட்​டர்​களுக்​கான கட்​டு​மானப் பணி ஆகியவை இறு​திக் கட்​டத்​தில் உள்​ளன.

நிலைய முகப்பு மற்​றும் பாத​சா​ரி​கள் நடை​பாதை அமைக்​கும் பணி​கள் 85 சதவீதம் முடிக்​கப்​பட்​டுள்​ளன. 5, 6-வது நடைமேடை​யில் சீரமைப்புப் பணி​கள் நிறைவடைந்​துள்​ளன. 7, 8-வது நடைமேடை​யில் சீரமைப்​புப் பணி​கள் நடை​பெறுகின்​றன. நடைமேடைகளில் மேற்​கூரைகள் அமைக்​கும் பணி முழு​மை​யாக நிறைவடைந்​துள்​ளன. 2-வது நடைமேடை, 7 மற்​றும் 8-வது நடைமேடை அருகே இரண்டு மின்​தூக்​கி​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன. 3 மற்​றும் 4-வது நடைமேடை, 5 மற்​றும் 6-வது நடைமேடை​யில் கூடு​தல் மின்​தூக்​கி​கள் அமைக்​கும் பணி விரை​வில் தொடங்க உள்​ளது.

பாத​சா​ரி​கள் நடை​பாதை, பயணி​கள் தகவல் அறி​யும் பலகைகள் ஆகிய​வற்​றின் இறு​திக் கட்​டப்​பணி​கள் நடை​பெறுகின்​றன. இதுத​விர, நவீன வடிவ​மைப்​புடன் புதிய மாடி மற்​றும் தரை நிலை கட்​டிடம், விசால​மான மக்​கள் கூடும் பகு​தி, ஏசி வசதி கொண்ட காத்​திருப்​போர் அறை​கள், ஓய்​வறை​கள் மற்​றும் விஐபி ஓய்​வறை​கள், விரி​வாக்​கப்​பட்ட பார்க்​கிங் வசதி உள்​ளிட்​டவை அமைக்​கும் பணி நடை​பெறுகிறது. அனைத்து பணி​களை​யும் அடுத்த ஆண்டு பிப்​ர​வரிக்​குள் முடிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ள​தாக, சென்னை ரயில்​வே கோட்​ட அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in