நடப்பாண்டில் 5-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: 40 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணையின் 
16 கண் மதகுகள் வழியாக, வெள்ள நீர் காவிரியில் பெருக்கெடுத்து  வருகிறது.  இதனை பொதுமக்கள்  ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணையின் 16 கண் மதகுகள் வழியாக, வெள்ள நீர் காவிரியில் பெருக்கெடுத்து வருகிறது. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
Updated on
2 min read

சேலம்​/தரு​மபுரி: மேட்​டூர் அணை நடப்​பாண்​டில் 5-வது முறை​யாக நிரம்​பியது. நீர் வரத்து அதி​க​மாக இருப்​ப​தால், அணை​யில் இருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் உபரி​யாக வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபா​யம் எச்​சரிக்கை தொடர்கிறது.

நடப்​பாண்​டில் முதல்​முறை​யாக, ஜூன் 29-ல் மேட்​டூர் அணை​யின் நீர் மட்​டம் 120 அடியை எட்​டி, நிரம்​பியது. டெல்டா பாசனத்​துக்கு மேட்​டூர் அணை​யில் இருந்து ஜூன் 12-ம் தேதி முதல் தொடர்ந்து நீர் திறக்​கப்​பட்டு வரு​வ​தால், அணை​யின் நீர் மட்​டம் குறைவதும், அணைக்கு நீர்​வரத்து அதி​கரிக்​கும்​போது, நீர்​மட்​டம் உயரு​வது​மாக இருக்​கிறது.

கர்நாடக அணையில் நீர்திறப்பு: கடந்த ஜூன் 29, ஜூலை 5, ஜூலை 20, ஜூலை 25 என நடப்​பாண்​டில் ஏற்​கெனவே, 4 முறை மேட்​டூர் அணை நிரம்​பியது. இந்​நிலை​யில், கடந்த 18-ம் தேதி, மேட்​டூர் அணை​யின் நீர் மட்​டம் 117.56 அடி​யாக இருந்​த​போது, பரு​வ​மழை காரண​மாக கர்​நாட​கா​வில் உள்ள அணை​கள் நிரம்​பியதும் அவற்​றில் இருந்து தமிழகத்​துக்கு விநாடிக்கு 1 லட்​சம் கனஅடிக்கு மேல் உபரிநீர் திறக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 1.08 லட்​சம் கனஅடி வீதம் நீர் வந்து கொண்​டிருந்​தது. அப்​போது அணை​யின் நீர்​மட்​டம் 119.02 அடி​யாக​வும், நீர் வெளி​யேற்​றம் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி​யாக​வும் இருந்​தது. இதனிடையே, அதி​கப்​படி​யான நீர்​வரத்து காரண​மாக, நேற்று அதி​காலை 4 மணி​யள​வில் மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் மீண்​டும் 120 அடியை எட்​டி, நடப்​பாண்​டில் 5-வது முறை​யாக நிரம்பி சாதனை படைத்​தது.

இதற்​கிடையே, அணைக்கு நீர்​வரத்து நேற்று மாலை விநாடிக்கு 69 ஆயிரத்து 736 கனஅடி​யாக குறைந்​தது. எனினும், அணை நிரம்பி உள்​ள​தால், இரவு 8 மணி நிலவரப்படி 40 ஆயிரம் கனஅடி நீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. இதனால், காவிரி கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை தொடர்​கிறது.

ஒகேனக்​கல் நில​வரம்: தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் காலை 6 மணி​யள​வில் விநாடிக்கு 78 ஆயிரம் கனஅடி​யாக​வும், காலை 7 மணி​யள​வில் 88 ஆயிரம் கனஅடி​யாக​வும், 8 மணி​யள​வில் 98 ஆயிரம் கனஅடி​யாக​வும், 10 மணியள​வில் 1 லட்​சத்து 15 ஆயிரம் கனஅடி​யாக​வும், இரவு 8 மணி​யள​வில் 1 லட்​சத்து 45 ஆயிரம் கனஅடி​யாக​வும் நீர்​வரத்து படிப்படி​யாக உயர்ந்​தது. இந்​நிலை​யில், நேற்று காலை 6 மணி​யள​வில் விநாடிக்கு 1 லட்​சத்து 5,000 கனஅடி​யாக​வும், மாலை 4 மணி நில​வரப்​படி 57 ஆயிரம் கனஅடி​யாக​வும் நீர்​வரத்து குறைந்​தது.

குளிக்க, பரிசல் இயக்க தடை: கர்​நாடக மாநில அணை​களில் இருந்து திறக்​கப்​படும் உபரி நீரின் அளவு குறைக்​கப்​பட்ட நிலை​யில் ஒகேனக்​கல் காவிரி​யிலும் நீர்​வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம், அருவியில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in