வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வயது 48 - கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!

மதுரையில் இருந்து நேற்று காலை புறப்பட்ட வைகை ரயிலுக்கு பூஜை செய்யப்பட்டது.
மதுரையில் இருந்து நேற்று காலை புறப்பட்ட வைகை ரயிலுக்கு பூஜை செய்யப்பட்டது.
Updated on
1 min read

மதுரை: மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் சேவையின் 48-வது ஆண்டு தொடக்க நாளையொட்டி மதுரை ரயில் நிலையத்தில் நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மதுரை-சென்னை இடையே இயங்கி வரும் பகல் நேர அதிவிரைவு ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ல் அறி முகப்படுத்தப்பட்டது.

இந்த ரயிலுக்கு நேற்று 48-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல் நடைமேடையில் காலை 6 மணிக்கு வைகை ரயில் இன்ஜின் முன்பாக ரயில் பயணிகள், ஆர்வலர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

தொடர்ந்து முன்னாள், தற்போதைய ரயில் ஓட்டுநர்களும் கவுரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னையை நோக்கி வைகை எக்ஸ்பிரஸ் ரயில் உற்சாகமாக புறப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in