கீதை உபதேசத்தை மனதில்கொண்டு தர்மத்தை நிலைநாட்டுவோம்: பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

கீதை உபதேசத்தை மனதில்கொண்டு தர்மத்தை நிலைநாட்டுவோம்: பழனிசாமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: கிருஷ்ண ஜெயந்​திக்கு வாழ்த்து தெரி​வித்த அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி மற்​றும் அமமுக பொதுச்​செயலாளர் டிடிவி தினகரன், கீதை உபதேசத்தை மனதில்​கொண்டு தர்​மத்தை நிலை​நாட்ட இந்​நாளில் உறு​தி​யேற்​போம் என தெரி​வித்​துள்​ளனர். நாடு முழு​வதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்​டாடப்​படு​கிறது.

இதையொட்டி அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திரு​நாளான கிருஷ்ண ஜெயந்​தியை கொண்​டாடும் மக்​கள் அனை​வருக்​கும் எனது நல்​வாழ்த்துக்கள்.

குழப்​பத்​தை​யும், தடு​மாற்​றத்​தை​யும் தவிர்த்து தெளிந்த நீரைப்​போல் மனதைநிலை நிறுத்தி கடமையைச் செய்​தால், ஒருவர் எடுத்த காரி​யத்​தில் வெற்​றி ​பெறலாம் என்​கிறது கிருஷ்ண பகவானின் கீதை.

அந்த உபதேசத்தை மனதில்​கொண்​டு, கிருஷ்ணர் அவதரித்த இத்​திரு​நாளில், ஒவ்​வொரு​வரும் அறத்​தைப் போற்றி தர்​மத்தை நிலை​நாட்ட உறு​தி​யேற்​போம். அனை​வருக்​கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்​துகளை உரித்​தாக்​கிக் கொள்​கிறேன்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: கிருஷ்ண ஜெயந்தி திரு​நாளில் நான், எனது என்ற பற்றை நீக்கி இன்​பத்​தை​யும், துன் பத்​தை​யும் சமமாகக் கருது​வதோடு, கடமை​களைச் சரிவரச் செய்​வதே வாழ்க்​கை​யின் மிக உயர்ந்த தர்​மம் என்ற கீத உபதேசத்தை மனதில் நிலை நிறுத்தி மனிதகுலம் மேம்பட நாம் அனை​வரும் உறு​தி​யேற்​போம்.

உலகம் போற்​றும் ஒப்​பற்ற நூலான பகவத்​கீதையை அருளிய கிருஷ்ண பகவானின் பிறந்​த​நாளில் மக்​கள் அனை​வரின் வாழ்விலும் அமை​தி​யும்,மகிழ்ச்​சி​யும் தழைத்​தோங்​கட்​டும். அனை​வருக்​கும் கிருஷ்ண ஜெயந்தி நல்​வாழ்​த்​துக்​கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in