

சென்னை: பொது இடங்களில் புகைப்பிடிப்பதையும், மது அருந்துவதையும் தடுக்கும் விதமாக கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பொது இடங்களில் புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு சுமார் 13.20 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், அருகில் இருப்பவர்கள் சுவாசிப்பதால் ஆண்டுக்கு சுமார் 2.20 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கும் செய்திகள் கவலைக்குரியது.
பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் உட்பட, 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பேருந்து நிலையங்கள், தேநீர் கடைகள் என பொது இடங்களில் சிகரெட், புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.