பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு: மேல்முறையீடு செய்கிறது ராமதாஸ் தரப்பு

பாமக பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷின் அழைப்பை ஏற்று நேற்று உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்த கட்சியின் தலைவர் அன்புமணி.
பாமக பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷின் அழைப்பை ஏற்று நேற்று உயர் நீதிமன்றத்துக்கு வருகை தந்த கட்சியின் தலைவர் அன்புமணி.
Updated on
1 min read

சென்னை: நீதிப​தி​யின் அழைப்பை ஏற்று பாமக தலை​வர் அன்​புமணி தனது வழக்​கறிஞர்​களு​டன் உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரானார். கட்​சி​யின் நிறுவனர் ராம​தாஸ் காணொலி மூலம் ஆஜரா​னார். இரு​வரிட​மும் தனது சேம்​பரில் வைத்து பேச்சுவார்த்தை நடத்​திய நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை விசா​ரித்து பொதுக்​குழு​வுக்கு தடை விதிக்க மறுத்து ராமதாஸ் தரப்பு மனுவை தள்​ளு​படி செய்​தார். இதை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்​யப்​போவ​தாக ராம​தாஸ் தரப்​பில் அறிவிக்கப்பட்​டுள்​ளது.

ராம​தாஸ், அன்​புமணிக்கு இடையே​யான கருத்து வேறு​பாடு நாளுக்​கு​நாள் அதி​கரித்து தனித்​தனி​யாக செயல்​பட்டு வருகின்றனர். இந்​நிலை​யில் மாமல்​லபுரத்​தில் ஆக.9-ம் தேதி​யான இன்று பொதுக்​குழு கூட்​டம் நடத்த அன்​புமணி அழைப்பு விடுத்​தார். இதற்கு தடை கோரி ராம​தாஸ் ஆதரவு பொதுச் செய​லா​ள​ரான முரளிசங்​கர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்திருந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்​பாக நேற்று நடந்​தது. அப்​போது ராம​தாஸ் தரப்​பில் வழக்​கறிஞர் அருள், வி.எஸ்​. கோபு ஆகியோ​ரும், அன்​புமணி தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் என்​.எல்​.​ராஜா மற்​றும் கே.​பாலு ஆகியோ​ரும் ஆஜராகி வாதிட்​டனர்.

அப்​போது கருத்து தெரி​வித்த நீதிப​தி, இந்த வழக்​கில் தன்​னால் 10 நிமிடங்​களில் முடிவு எடுத்​து​விட முடி​யும் என்​றாலும், இரு​வரது நலன் கரு​தி​யும் அவர்​களு​டன் நேரில் பேச விரும்​பு​கிறேன். எனவே ராம​தாஸும் அன்​புமணி​யும் மாலை 5.30 மணிக்கு தனது சேம்பருக்கு வரு​மாறு அழைப்பு விடுத்தார்.

அதன்​படி அன்​புமணி தனது வழக்​கறிஞர்​களு​டன் நேற்று நீதிபதி சேம்​பரில் ஆஜரா​னார். உடல்​நிலை காரண​மாக ராம​தாஸ் காணொலி மூலம் ஆஜரா​னார். இரு​வரிட​மும் சுமார் 30 நிமிடங்​ளுக்​கும் மேலாக நீதிபதி பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். பின்​னர் பாமக பொதுக்​குழு​வுக்கு தடை கோரும் வழக்கின் விசா​ரணை நேற்​றிரவு நீதிபதி சேம்​பரில் மீண்​டும் நடந்​தது. அரசு தரப்​பில் கூடுதல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர். முனியப்​ப​ராஜ் ஆஜரா​னார்.

அதன்​பிறகு நேற்​றிரவு நீதிபதி பிறப்​பித்த உத்​தர​வில், “அன்​புமணி ஆக.9 (இன்​று) நடத்​தும் பொதுக்​குழு​வுக்கு தடை விதிக்க முடியாது” எனக்​கூறி ராம​தாஸ் தரப்பு மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார். மேலும் இந்த விவ​காரம் தொடர்​பாக சிவில் நீதி மன்​றத்தை நாட​வும் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இந்த உத்​தரவை எதிர்த்து ராம​தாஸ் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் உடனடி​யாக மேல்​முறை​யீடு செய்ய திட்​ட​மிட்​டுள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in