‘நோ’ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் சென்னை - மெரினாவில் போக்குவரத்து நெரிசல்

‘நோ’ பார்க்கிங்கில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் சென்னை - மெரினாவில் போக்குவரத்து நெரிசல்
Updated on
2 min read

சென்​னை​யின் அடை​யாளங்​களில் ஒன்​றாக விளங்கி வரும் மெரினா கடற்​கரைக்கு வார​நாட்​களில் 30 ஆயிரத்​துக்​கும் மேற்பட்டோர் வந்து செல்​கின்​றனர். அதுவே வார இறுதி நாட்​கள், விடு​முறை தினங்​களில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் வருகை தருகின்​றனர்.

குடும்​பத்​துடன் சிறு​வர்​கள் விளை​யாடி மகிழ விளை​யாட்​டு​கள், முதி​யோர் நடைப​யிற்சி செய்ய நீண்ட நடைபாதை, இளைஞர்கள் நண்​பர்​களு​டன் அமர்ந்து சிற்​றுண்டி சாப்​பிட்டு பேசி மகிழ உணவகங்​கள் என அனைத்து தரப்​பினரை​யும் கவர்வதால் மெரி​னா​வுக்கு வர, சிறு​வர்​கள் முதல் முதி​யோர் வரை விரும்​பு​கின்​றனர்.

இதனால் வார இறுதி நாட்​களான சனி மற்​றும் ஞாயிற்​றுக்​கிழமை​களில் மெரி​னா​வில் மாலை முதல் இரவு வரை கூட்​டம் அலைமோதி வரு​கிறது. காம​ராஜர் சாலை​யில் உழைப்​பாளர் சிலை முதல் கலங்​கரை விளக்​கம் வரை மெரி​னா​வுக்​குள் நுழை​யும் கடற்​கரை சாலை​யில் இருசக்கர வாக​னங்​களும், கார்​களும் நிரம்​பி வழிகின்​றன.

பொது​மக்​கள் நடந்து செல்​லவே முடி​யாத படி வாகன நெருக்​கடி இருந்து வரு​கிறது. மெரினா நீச்​சல் குளம் முதல் நேதாஜி சிலைவரை உள்ள மெரினா கடற்​கரை சாலை​யின் ஓரங்​களில் வாக​னங்​கள் நிறுத்​து​வதற்கு அனு​மதி இல்​லை.

அதை குறிப்​பிடும் வகை​யில் ஆங்​காங்கே ‘நோ’​பார்க்​கிங் அடை​யாளம் கொண்ட பலகைகளும் திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸா​ரால் வைக்கப்பட்டுள்ளன. இருந்​தா​லும் வார இறுதி நாட்​கள், விடு​முறை நாட்​களில் மெரி​னா​வுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்​டிகள் பெரும்​பாலானோர் இந்த பகு​தி​யில் தங்​களது வாக​னங்​களை நிறுத்​தி​விட்டு கடற்​கரைக்​குள் செல்​வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​கிறது.

இதனால் அப்​பகு​தி​யில் நீண்ட தூரத்​துக்கு இருசக்கர வாக​னங்​களும், ஆட்​டோக்​களும் சாலையை அடைத்து நிற்​கின்​றன. இவர்களை பின்​தொடர்ந்து வரும் கார்​களும், மற்ற இருசக்கர வாக​னங்​களும் சாலையை பயன்​படுத்த முடி​யாமல் சிரமத்​துக்கு உள்​ளாகின்​றனர்.

இதனால் பொது​மக்​கள் சாலை​யின் நடுவே நடந்து செல்​லும் நிலை ஏற்​படு​கிறது. பார்க்​கிங் கிடை​யாது என போலீ​ஸா​ரால் எச்​சரிக்கை பலகை வைக்​கப்​பட்​டிருந்​தும், அதைமீறி சில வாகன ஓட்​டிகள் தங்​களது வாக​னங்​களை நிறுத்தி செல்வ​தால், நெரிசல் ஏற்​படு​கிறது.

இதுகுறித்து பெரம்​பூரை சேர்ந்த ரவிக்​கு​மார் என்​பவர் கூறுகை​யில், “மெரி​னா​வுக்கு அடிக்​கடி குடும்​பத்​துடன் வந்து செல்​வது வழக்​கம். குறிப்​பாக வார இறுதி நாட்​களில் வர விருப்​பம். அவ்​வாறு வரும்​போது எப்​போதுமே மெரினா கடற்​கரை சாலை​யில், மெரினா நீச்​சல் குளத்​தில் இருந்து கடற்கரைக்கு செல்​வதற்கு நீண்ட நேர​மாகிறது. சாலை​யோரங்​களில் இருசக்கர வாகனங்களும், ஆட்​டோக்​களும் அடைத்து நிற்​ப​தால், பொது​மக்​கள் சாலை​யில் நடு​வில் நடந்து செல்​கின்​றனர்.

நேதாஜி சிலையை தொடர்ந்து இருசக்கர வாக​னங்​களுக்கு பார்க்​கிங் வசதி ஏற்​படுத்​தப்​பட்​டிருக்​கும் போது அதற்கு முன்​பாகவே ‘நோ’ பார்க்​கிங்​கில் இவ்​வாறு வாக​னங்​களை நிறுத்தி செல்​வது அடுத்​தடுத்து வரும் வாகன ஓட்​டிகளை எரிச்​சல் அடைய செய்கிறது.

வார இறு​தி​யில் சிறிது நேரம் குடும்​பத்​துடன் நேரத்தை மகிழ்ச்​சி​யாக செல​வழிக்​க​வும், பொழுது போக்கி மனதை இலகு​வாக்​கி செல்​ல​வும் வரும்​போது, மெரி​னா​வுக்கு நுழை​யும் போதே நீண்ட நேரம் காத்​திருப்​பது சோர்​வடைய செய்​கிறது. எனவே சம்​பந்​தப்​பட்ட துறை அதி​காரி​கள் ‘நோ’ பார்க்​கிங்​கில் வாக​னங்​கள்​ நிறுத்​தப்​படு​வதை தடுக்​க உரிய நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​.” என வலி​யுறு​த்​தி​னார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in