Published : 03 Jul 2025 05:45 AM
Last Updated : 03 Jul 2025 05:45 AM

திருப்புவனம் சம்பவம் நடந்த 2 நாளில் சட்ட நடவடிக்கைகள்: ஆர்.எஸ்.பாரதி தகவல்

சென்னை: தமிழக அரசி​யல் வரலாற்​றில் இது​வரை இல்​லாத வகை​யில், திருப்​புவனம் கொடூர சம்​பவம் நடந்த இரண்டே நாட்​களில் சட்ட ரீதி​யான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக திமுக அமைப்பு செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: திருப்​புவனம் கொடூர நிகழ்வு பற்​றிய தகவல் வந்​தது​மே, குற்​றம்​சாட்​டப்​பட்ட 6 காவலர்​கள் உடனடி​யாக பணி இடைநீக்​கம் செய்​யப்​பட்​டனர். விரைந்து கைதும் செய்​யப்​பட்​டனர்.

பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரிடம் முதல்​வர் ஸ்டா​லின் தொலைபேசி​யில் தொடர்​பு​கொண்டு பேசி​யதோடு, இந்த சம்​பவத்​துக்கு காரண​மானவர்​கள் மீது, கடுமை​யான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டு, நியா​யம் கிடைக்க வழி​வகை செய்​யப்​படும் என உறுதி அளித்​துள்​ளார். வழக்​கும் உடனடி​யாக சிபிஐக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது.

திருப்​புவனம் இளைஞர் அஜித்​கு​மாரின் சகோ​தரர் நவீன்​கு​மாருக்கு அரசுப் பணி வழங்​கியதோடு, அவர்​களது கோரிக்​கைகள் அனைத்​தும் உடனடி​யாக நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. சம்​பவம் நடந்த இரண்டே நாட்​களில் சட்ட ரீதி​யான இத்​தனை நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டிருப்​பது தமிழக அரசி​யல் வரலாற்​றில் இது​வரை நிகழாதவை. இன்று அதை நிறைவேற்​றிக் காட்​டி​யுள்​ளார் முதல்​வர்.

பழனி​சாமி ஆட்​சி​யின்​போது சாத்​தான்​குளம் சம்​பவத்​தில் ஜெய​ராஜ், பென்​னிக்ஸ் இரு​வருமே உடல்நல குறை​வால் இறந்​தார்​கள் என்​றும், தூத்​துக்​குடி துப்​பாக்​கிச்​சூட்டை டிவி​யில் பார்த்​து​தான் தெரிந்​து​கொண்​டேன் என்​றும் ஆணவத்​தோடு, அலட்​சிய மனப்​பான்​மையோடு பேசி​ய​வர்​தானே நீங்​கள். அப்​போது நீதி எங்கே போனது. உங்​களுக்கு மனசாட்சி இல்​லை​யா. உங்​கள் கண்​துடைப்பு நாடகங்​களை யாரும் நம்​ப​மாட்​டார்​கள். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x