Published : 30 Jun 2025 05:08 AM
Last Updated : 30 Jun 2025 05:08 AM

டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருப்பது ஏன்? - டாஸ்மாக் ஊழியர்களுக்கு மேலாளர்கள் நோட்டீஸ்

சென்னை: டிஜிட்​டல் பரிவர்த்​தனை குறை​வாக இருக்​கும் டாஸ்​மாக் கடை ஊழியர்​களுக்கு டாஸ்​மாக் மேலா​ளர்​கள் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்​மாக் மது​பானக் கடைகள் உள்​ளன. இந்த கடைகளில் பாட்​டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடு​தல் பணம் வசூல் செய்​யப்​பட்டு வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதனை தடுப்​ப​தற்​காக டாஸ்​மாக் நிர்​வாகம் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

அந்​தவகை​யில் உற்​பத்தி முதல் விற்​பனை வரை என்ற திட்​டத்தை அறி​முகம் செய்​தது. அதன்​படி விற்​பனையை கண்​காணிக்க டாஸ்​மாக் நிர்​வாகம் டிஜிட்​டல்​மய​மாகி உள்​ளது. டாஸ்​மாக் கடைகளில் விற்​கப்​படும் ஒவ்​வொரு பாட்​டிலும், செல்​போன் வடிவலான கையடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்து அதன் பிறகே விற்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், டிஜிட்​டல் பரிவர்த்​தனை ஊக்​குவிக்​கும் வித​மாக டாஸ்​மாக் கடைகளி​லும், நேரடி​யாக கைகளில் பணம் பெறு​வதை தவிர்த்து செல்​போன் செயலி வழி​யான பணப்​பரிவர்த்​தனை போன்ற டிஜிட்​டல் முறை​யில் பணம் வசூலிக்க வேண்​டும் என ஊழியர்​களுக்கு நிர்​வாகம் உத்தரவிட்டுள்ளது.

25 சதவீதம்.. தினசரி கூட்​டம் அதி​க​முள்ள கடைகளில் அதி​கபட்​ச​மாக 40 சதவீதம் அளவிலும், குறை​வான கூட்​டம் இருக்​கும் கடைகளில் 25 சதவீதம் அளவிலும் டிஜிட்​டல் முறை​யில் பணம் வசூலிக்க வேண்​டும் என உத்​தர​விட்​டுள்​ளனர். ஆனால், சில ஊழியர்​கள் இதை பின்​பற்​றாமல் பணத்தை நேரடி​யாக கைகளில் பெறுகிறார்​கள் என டாஸ்​மாக் நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது. மேலும், டிஜிட்​டல் முறை​யில் பணம் வசூல் செய்​வது 25 சதவீதத்​துக்கு குறை​வாக இருக்​கும் மதுக்​கடை ஊழியர்​களுக்கு விளக்​கம் கேட்டு டாஸ்​மாக் மேலா​ளர்​கள் நோட்​டீஸ் அனுப்பி உள்​ளனர்.

ஒழுங்கு நடவடிக்கை: மேலும், அந்த நோட்​டீஸில், டிஜிட்​டல் பண வசூல் குறை​வாக இருப்​ப​தால், உங்​கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. டாஸ்​மாக் நிர்​வாகத்​தின் இந்த நடவடிக்​கை​யால் ஊழியர்​கள் மிகுந்த மன உளைச்​சலுக்கு ஆளாகி இருப்​ப​தாக தெரி​வித்​துள்​ளனர். மேலும், இலக்கு நிர்​ண​யித்து டிஜிட்​டல் முறை​யில் பணம் வசூல் செய்ய சொல்​வது பணி​யாளர்​கள் விரோத நடவடிக்​கை என குற்​றம்சாட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x