சென்​னை​யில் நாளை மதிமுக 32-ம் ஆண்டு தொடக்க விழா

சென்​னை​யில் நாளை மதிமுக 32-ம் ஆண்டு தொடக்க விழா
Updated on
1 min read

சென்னை: மதிமுகவின் 32-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மதிமுகவின் 32-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி, மே 6-ம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் இதில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இதில் மாநில, மாவட்ட, பகுதி வாரியாக உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in