அரசு மருத்துவமனைகளில் உள்ள 2,642 மருத்துவர் காலி பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்

அரசு மருத்துவமனைகளில் உள்ள 2,642 மருத்துவர் காலி பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்

Published on

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 2,642 மருத்துவர் பணியிடங்களுக்கு மருத்துவர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது. வரும் 15-ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு 4,585 மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் வரும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2,553 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 5-ம் தேதி நடந்த தேர்வில், எம்பிபிஎஸ் முடித்த 24 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றனர். கூடுதலாக 89 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் அலுவலகத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்புக்கு 4,585 மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பணிநியமனம் செய்யப்படவுள்ள மருத்துவர்களுக்கு வரும் 20-ம் தேதிக்குப்பின் கலந்தாய்வு நடைபெறுகிறது. பின்னர், மருத்துவர்களுக்கு பணிநியன ஆணைகளை முதல்வர் வழங்கவுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in