தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் கைது - 3 படகுகளும் பறிமுதல்

தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் கைது - 3 படகுகளும் பறிமுதல்
Updated on
1 min read

ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை கைப்பற்றி 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 439 விசைப்படகுகள் அனுமதி சீட்டு பெற்று சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றன. இதில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ரூபில்டன், டேனியல், சச்சின் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில் கைப்பற்றினர்.

படகுகளிலிருந்த ரூபில்டன், கிறிஸ்டோபர், ஜான், ரீகன், பாலாஜி, இன்னாசி, கிரின்சன், நம்பு மணி, செந்தில் குமார் , சார்லஸ் மிரண்டா, டேனியல், ஆகாஷ், வினிஸ்டன், அண்ணாதுரை, ஸ்டாலின், சீனிவாசன், ஸ்டெல்லஸ், செந்தூர் பாண்டி, ஏனோக், ஜெயபால், வீரபாண்டி, சுரேஷ், அந்தோணி, சூசை, சிவசங்கர், குணசேகரன், முத்து, அபிஸ்டன், சந்தோஷ், ரேமிஸ்டன், மேக்மில்லன், ஆரோக்கிய ஜோபினர், அகரின் ஆகிய 33 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

33மீனவர்களையும் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்ற இலங்கை கடற்படையினர் அந்நாட்டு மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து 33 தமிழக மீனவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 6 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 51 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in