

தாம்பரம்: சிறைவாசிகள் போலீஸ் பக்ருதீன், இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட சகோதரர்கள் புழல் சிறையில் சிறை அதிகாரிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டத்தை கண்டித்து சென்னையில் ஜன.24 அன்று மனித நேய மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாகிர் உசேன் தலைமையில் தாம்பரத்தில் இன்று (ஜன.18) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச் செயலாளர் யாக்கூப் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் சிறைவாசிகள் போலீஸ் பக்ருதீன், இஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்ட சகோதரர்கள் புழல் சிறையில் சிறை அதிகாரிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டத்தை கண்டித்து சென்னையில் ஜன.24 அன்று மனித நேய மக்கள் கட்சி சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்திலிருந்து அதிக மக்களை திரட்டி கலந்து கொள்வது என தீர்மானம் செய்யப்பட்டது. ஜன.26 குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ரத்ததான முகாம், ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்குவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.
ஜன 30 தேசத் தந்தை காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளை முன்னிட்டு சமூக நீதி மாணவர் இயக்கம் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பாக கருத்தரங்கம் பல்லாவரம் இனாயத் மஹாலில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. பிப்.7 மனிதநேய மக்கள் கட்சி 17-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் கொடியேற்றம், கல்வெட்டு அமைப்பது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, அதிகமான உறுப்பினர்கள் கட்சியில் சேர்ப்பது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.