

சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்க முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அந்தமான் நிகோபாருக்கான பாஜக தலைவரை தேர்வு செய்வதற்கான சிறப்பு அதிகாரியாக நான் செல்கிறேன். இது தொடர்பாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல் சூழல் பற்றியும் நட்டாவிடம் பேச உள்ளேன்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் பின்புலத்தில் இருக்கிறார்கள், ‘அந்த சார்யார்,' என்று கேட்டால் இவர்களுக்கு கோபம் வருகிறது. இதுதொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் எந்த கருத்தும் சொல்லவில்லை. கொடுக்கும் நிதியை முறையாக பயன்படுத்துவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.