Last Updated : 11 Dec, 2024 04:01 PM

4  

Published : 11 Dec 2024 04:01 PM
Last Updated : 11 Dec 2024 04:01 PM

அரசியல்வாதிகளில் ‘ஈகோ’ - ஆவடியில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத அம்மா திருமணம் மண்டபம்!

ஆவடியில் திறக்கப்படாமல் உள்ள அம்மா திருமண மண்டபம்.

சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் 2018-ம் ஆண்டு 29,497 சதுர அடி பரப்பளவில் திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 3 அடுக்​குகள் கொண்ட இந்த மண்டபத்​தின் முதல் தளத்​தில் நவீன சமையலறை வசதி​யுடன் 400 பேர்உணவருந்​தும் கூடமும், 2-ம் தளத்​தில் 700 பேர் அமரும் வகையில் குளிர்​சாதன வசதி​யுடன் கூடிய மணமேடை​யும், 3-ம் தளத்​தில் மணமகன், மணமகள் ஓய்வு அறை ஆகியவை அமைக்​கப்​பட்​டுள்ளன.

மேலும், இந்த மண்டபத்​தில் 75 நான்கு சக்கர வாகனங்​களும், 100 இருசக்கர வாகனங்​களும் நிறுத்தக்கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது. மண்டபத்​துக்​குள் கண்காணிப்பு கேமராக்​கள், சூரியஒளி மின்​சாரம் தயாரிப்​ப​தற்கான வசதிகள் என தனியார் மண்டபத்​தையே மிஞ்​சும் அளவுக்கு வசதிகள் செய்​யப்​பட்​டுள்ளன. பொது​மக்கள் அனைவரும் நியாயமான கட்ட​ணத்​தில் திரு​மணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்​சிகளை நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் கட்ட​ணமாக நிர்​ண​யிக்​கப்​பட்​டது. ஆனால், மண்டபம் கட்டி முடிக்​கப்​பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்​கப்​படவில்லை. மேலும், இந்த மண்டபம் ஆவடி ரயில், பேருந்து நிலையம் மற்றும் மார்க்​கெட்டுக்கு அருகில் இருப்​ப​தால் பொது​மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

ஆனால், இது கடந்த அதிமுக ஆட்சி​யில் கட்டப்​பட்​ட​தால், தற்போதைய ஆட்சி​யாளர்​களின் ‘ஈகோ’ காரண​மாக​வும், அதிகாரிகளின் அலட்​சியம் காரண​மாக​வும் திருமண மண்டபத்தை திறக்​காமல் உள்ளதாக பொது​மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன், திருமண மண்டபத்தை சுற்றி சில தனியார் மண்டபங்கள் உள்ளன. இதனால், அம்மா மண்டபத்தை திறந்​தால், அந்த தனியார் மண்டபங்​களின் வருமானம் பாதிக்​கும் என்ப​தா​லும் மண்டபத்தை திறக்​காமல் காலம் தாழ்த்து​வ​தாக​ குற்​றச்​சாட்டு எழுந்​துள்ளது. நிகழ்ச்​சிகள் ஏதும் நடைபெறாத​தால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்​டுள்​ளதோடு, பொது​மக்​களுக்​கும் குறைந்த கட்ட​ணத்​தில் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்​சிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்​டுள்​ளது.

நிகழ்ச்​சிகள் நடைபெறாத​தால் மண்டம் பராமரிப்​பின்றி பாழாகும் நிலை உருவாகி​யுள்​ளது. மேலும், அருகில் திடக்​கழிவு மேலாண்மை கிடங்​கில் பணிபுரி​யும் ஊழியர்கள் மற்றும் குப்​பைகளை ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்​தும் பார்க்​கிங் இடமாக இந்த மண்டம் தற்போது பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. மண்டபத்தை திறக்​கக்​கோரி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உள்ளிட்ட பல்​வேறு ஊடகங்​களில் செய்தி வெளி​யாகி​யும் இதுவரை மண்​படத்தை ​திறக்​காமல் அதிகாரி​கள் அலட்​சி​யமாக உள்ளதாக அப்பகுதி மக்​கள் குற்​றம்​ சாட்​டினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x