‘தமிழுக்கும் தமிழ் சமூகத்துக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய!’ - முதல்வர் ஸ்டாலின்

மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Updated on
1 min read

சென்னை: “மொழி, நாடு, பெண் விடுதலை, பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய!” என்று மகாகவி பாரதியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்! தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்! மொழி, நாடு, பெண் விடுதலை, பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய!” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முன்னதாக, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள மகாகவி பாரதியாரின் உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in