ராம்கோ சூப்பர்கிரீட் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்மிகு பொறியாளர் விருதுகள் 2024’ - சென்னை நிகழ்வில் 62 பொறியாளர்களுக்கு வழங்கல்

சென்னையில் நடைபெற்ற ராம்கோ சூப்பர்கிரீட்- 'இந்து தமிழ் திசை' - 'சீர்மிகு பொறியாளர் விருது வழங்கும் விழாவில் (இடமிருந்து டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் இணை பதிவாளர் எம்.கணேசன், ரினாகான் ஏ.ஏ.சி ப்ளாக்ஸ் தலைமை செயல்பாட்டு அலுவலர் வெங்கடேஷ் பக்காலா. ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உதவி துணைத் தலைவர் (பிராண்ட் நிர்வாகம்) ரமேஷ் பரத், விருது தேர்வு நடுவர்கள் ரவீந்திர சுப்பையா, கே.பி.ஜெயா, எ.ஆனந்தவள்ளி, ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் துணைத் தலைவர் (விற்பனை) கே.கே.சதாசிவம். 'இந்து தமிழ் திசை' ஆசிரியர் கே.அசோகன், தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்ரமணியம்.
சென்னையில் நடைபெற்ற ராம்கோ சூப்பர்கிரீட்- 'இந்து தமிழ் திசை' - 'சீர்மிகு பொறியாளர் விருது வழங்கும் விழாவில் (இடமிருந்து டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் இணை பதிவாளர் எம்.கணேசன், ரினாகான் ஏ.ஏ.சி ப்ளாக்ஸ் தலைமை செயல்பாட்டு அலுவலர் வெங்கடேஷ் பக்காலா. ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் உதவி துணைத் தலைவர் (பிராண்ட் நிர்வாகம்) ரமேஷ் பரத், விருது தேர்வு நடுவர்கள் ரவீந்திர சுப்பையா, கே.பி.ஜெயா, எ.ஆனந்தவள்ளி, ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் துணைத் தலைவர் (விற்பனை) கே.கே.சதாசிவம். 'இந்து தமிழ் திசை' ஆசிரியர் கே.அசோகன், தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்ரமணியம்.
Updated on
2 min read

சென்னை: ராம்கோ சூப்​பர்​கிரீட் வழங்​கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்​மிகு பொறி​யாளர் விருது' வழங்​கும் விழா சென்னை​யில் நடைபெற்​றது.

கட்டு​மானத்​தி​லும், கட்டமைப்​பிலும் சிறப்பான முறை​யிலும், தனித்து​வத்​துட​னும் செயலாற்றி வரும் பொறி​யாளர்​களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்​பர்​கிரீட் சிமென்ட் வழங்​கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘சீர்​மிகு பொறி​யாளர் விருது’, ‘வளர்​மிகு பொறி​யாளர் விருது’, ‘திறன்​மிகு பொறி​யாளர் விருது - 2024’ வழங்​கும் விழா சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது.

ரினா​கான் ஏ.ஏ.சி. ப்ளாக்ஸ், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்​கழகம் ஆகியவை இணைந்து வழங்​கின. 19 பேருக்கு சீர்​மிகு பொறி​யாளர் விருது, 7 பேருக்கு திறன்​மிகு பொறி​யாளர் விருது, 36 பேருக்கு வளர்​மிகு பொறி​யாளர் விருது என மொத்தம் 62 பேருக்கு விருதுகள் வழங்​கப்​பட்டன.

ராம்கோ சூப்​பர்​கிரீட் சிமென்ட் உதவி துணைத் தலைவர் (பிராண்ட் நிர்​வாகம்) ரமேஷ் பரத், ரினா​கான் ஏ.ஏ.சி. ப்ளாக்ஸ் தலைமை செயல்​பாட்டு அலுவலர் வெங்​கடேஷ் பக்காலா, டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக இணைப் பதிவாளர் டாக்டர் எம்.கணேசன் ஆகியோர் விருதுகளை வழங்​கினர்.

விழா​வில் ரமேஷ் பரத் பேசி​ய​தாவது:‘இந்து தமிழ் திசை’​யுடன் இணைந்து கடந்த 2 ஆண்டு​களாக சீர்​மிகு பொறி​யாளர் விருதுகளை வழங்​கு​வ​தில் ராம்கோ நிறு​வனம் பெருமை கொள்​கிறது. 1962-ல் தினமும் 200 டன் சிமென்ட் உற்பத்தி செய்​யக்​கூடிய சிறு நிறு​வன​மாகத் தொடங்​கப்​பட்ட ராம்கோ நிறு​வனம், தற்போது 23 மில்​லியன் டன் சிமென்ட் உற்பத்தி செய்​யும் மிகப்​பெரிய நிறு​வனமாக வளர்ந்​துள்ளது. இதற்கு அடிப்படை காரணமாக இருப்​பவர்கள் கட்டு​மானப் பொறி​யாளர்கள் மற்றும் கொத்​த​னார்​கள்.

சாலை வசதி, பெரிய அணைகள், பெரிய பாலங்​கள், சுரங்கப் பாதைகள் போன்ற​வை​தான் நாட்​டின் வளர்ச்​சிக்கு காரணம். இதற்கு அடிப்​படையாக இருப்​பவர்கள் கட்டு​மானப் பொறி​யாளர்​கள். கட்டு​மானத் துறை​யில் புதுப்புது தொழில்​நுட்​பங்​களைப் புகுத்த எங்கள் நிறு​வனம் ஒருபோதும் தயங்​கு​வ​தில்லை. அதற்கு எவ்வளவு செலவானாலும், அந்த தொழில்​நுட்​பங்களை எங்கள் நிறு​வனங்​களில் நடைமுறைப்​படுத்தி விடு​வோம். தரம், நம்பிக்கை-இவை​தான் எங்கள் தாரக மந்திரம். கட்டு​மானத் துறைக்கு 19 வகையான சிமென்ட்களை தயாரித்து வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ரினா​கான் ஏ.ஏ.சி. ப்ளாக்ஸ் தலைமை செயல்​பாட்டு அலுவலர் வெங்​கடேஷ் பக்காலா பேசும்​போது, ‘‘கடந்த 15 ஆண்டு​களில் கட்டு​மானத் துறை மிகப்பெரிய மாற்​றங்​களைக் கண்டுவருகிறது. இத்துறை​யில் நுகர்​வோர் புதிய தொழில்​நுட்​பங்களை எதிர்​பார்க்​கிறார்​கள். அந்த வகையில், கட்டு​மானப் பொறி​யாளர்​களுக்கு விருது வழங்​கும் முயற்சி பாராட்டுக்​குரியது. கட்டு​மானத் துறை வளர்ச்​சி​யில் பொறி​யாளர்​களுக்கு முக்​கியப் பங்கு உண்டு. இத்துறை​யில் புதிய தொழில்​நுட்​பங்களை உருவாக்​கும் பொறி​யாளர்​களைப் பாராட்டு​கிறோம்’’ என்றார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்​கழகத்​தின் பயோ-டெக்​னாலஜி துறை​யின் தலைவர் பேராசிரியை ராஜேஷ்வரி பேசும்​போது, ‘‘1998-ம் ஆண்டு பொறி​யியல் கல்லூரி​யாகத் தொடங்​கப்​பட்ட எங்கள் நிறு​வனம், 2003-ம் ஆண்டு நிகர்​நிலை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்று, சிறப்​பாகச் செயல்​பட்டு வருகிறது. தேசிய தர அங்கீ​காரக் கவுன்​சில் (நாக்) ‘ஏ’ தர அங்கீ​காரம் பெற்ற எங்கள் பல்கலைக்​கழகத்​தின் அனைத்து துறை​களும் தேசிய தர வாரி​யத்​தின் (என்​பிஏ) அங்கீ​காரம் பெற்றிருக்​கின்றன.

கட்டு​மானத் துறைக்கு தேவை​யான, உயர்தர கட்டு​மானப் பொறி​யாளர்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இன்றைய தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு ஏற்ப அவர்​களைத் தயார்​படுத்து​கிறோம்" என்றார்.

விருது தேர்​வுக் குழு​வில் இடம்​பெற்ற சென்னை சிஎஸ்​ஐஆர் கட்டு​மானப் பொறி​யியல் ஆராய்ச்சி மைய இயக்​குநர் டாக்டர் என்.ஆனந்தவள்ளி, பி.எஸ்​.அப்​துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்​டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்​னாலஜி​யின் தலைமைப் பொறி​யாளர் ரவீந்திர சுப்​பையா, அண்ணா பல்கலை. பூகம்பம் மற்றும் மண் கட்டமைப்புப் பிரிவுத் தலைவர் பேராசிரியை டாக்டர் கே.பி.ஜெயா ஆகியோர், விருது தேர்வு அனுபவங்​களைப் பகிர்ந்​து​கொண்​டனர்.

‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றுப் பேசும்​போது, ‘‘இந்து தமிழ் திசை சார்​பில் சிறந்த ஆசிரியர்​களுக்கு அன்பாசிரியர் விருதும், அறிவியலில் சிறந்து விளங்​கும் குழந்தை​களுக்கு நாளைய விஞ்​ஞானி விருதும் வழங்​கப்​படு​கின்றன. அதேபோல, பொறி​யியல் துறை​யில் சிறந்து விளங்​கு​வோருக்கு சீர்​மிகு பொறி​யாளர் விருது வழங்​கப்​படு​கிறது. இயற்​கைப் பேரிடர்களை எதிர்​கொள்​ளும் வகையில் பொறி​யாளர்கள் கட்டு​மானங்​களில் புதிய கண்டு​பிடிப்புகளை உருவாக்க வேண்​டும். உலகத் தரத்​திலான தொழில்​நுட்​பங்​களைப் புகுத்தி, அந்த அனுபவங்களைஅடுத்த ஆண்டு நடைபெறும் விழா​வில் பகிர்ந்து ​கொள்ள வேண்​டும்’’ என்றார்.

‘இந்து தமிழ் திசை’ தலைமை செயல் அதிகாரி சங்கர் வி.சுப்​ரமணியம் பேசும்​போது, ‘‘கரோனா காலகட்டத்​தில் ஆசிரியர்​களும், மருத்​துவர்களும் சிறப்​பாகப் பணியாற்றினர். அத்தகைய ஆசிரியர்களை கவுரவிக்​கும் வகையில் அன்பாசிரியர் விருதை​யும், மருத்துவ நட்சத்​திரம் விருதை​யும் ‘இந்து தமிழ் திசை’ வழங்கி வருகிறது.

அந்த வழியில், சிறந்த பொறி​யாளர்​களைக் கவுரவிக்க சீர்மிகு பொறியாளர் விருது வழங்​கப்​படு​கிறது. எந்த நாட்​டின் பொருளாதார முன்னேற்றத்​துக்​கும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிதான். அதற்கு அடித்தளமாகத் திகழ்பவர்கள் கட்டு​மான பொறியாளர்கள். கட்டுமானத்துறையில் உருவாகும் புதிய தொழில்நுட்​பங்களை மாணவர்​களிடம் கொண்டுசேர்க்க வேண்​டும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முது​நிலை உதவி ஆசிரியர் மு.முரு​கேஷ் தொகுத்து வழங்​கினார். ராம்கோ சூப்​பர்​கிரீட் சிமென்ட் துணைத் தலை​வர் (​விற்பனை) கே.கே.ச​தாசிவம் நன்றி கூறினார். ​விழா​வில், தமிழ்​நாடு கட்டு​மானத் தொழி​வாளர் நல வாரி​யத் தலை​வர் பொன்​.கு​மார், தமிழ்​நாடு நெடுஞ்​சாலைத் துறை பொறி​யாளர் சங்க ​மாநிலத் தலை​வர் தங்​க.கண்​ணன் உள்​ளிட்​டோர்​ கலந்​து​கொண்​டனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in