போக்குவரத்து ஓய்வூதியருக்கு அகவிலைப்படி உயர்வு கோரி டிச.12-ல் சிஐடியு தர்ணா

போக்குவரத்து ஓய்வூதியருக்கு அகவிலைப்படி உயர்வு கோரி டிச.12-ல் சிஐடியு தர்ணா
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி டிச.12-ல் தர்ணா போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வுகால பணப்பலன், மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். அனைத்து துறையின் ஓய்வு பெற்றவர்களும் அகவிலைப்படி உயர்வு பெறும்போது, போக்குவரத்து துறையில் மட்டும் 9 ஆண்டுகளுக்கும் மேலாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படுகிறது. அதேநேரம், திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவில்லை.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12-ம் தேதி, சென்னை பல்லவன் சாலையில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும். இதற்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமை வகிக்கிறார். இதில் அனைத்து கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இது முற்றிலும் ஓய்வூதியர்கள் நலன்களை முன்வைத்து நடத்தப்படும் தர்ணா போராட்டம் என்பதால் ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in