மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மேட்டூர்: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6,416 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 8,268 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 92.84 அடியாகவும், நீர் இருப்பு 55.95 டிஎம்சியாகவும் இருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in