வக்ஃப் சட்ட விதிகளை பலவீனப்படுத்துவதை தோற்கடிக்க வலியுறுத்தல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

திருச்சி: தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் நேற்றுவெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வக்ஃப் சொத்துகளையும், மஸ்ஜித்கள், தர்காக்கள், மதரஸாக்கள் என 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்ஃப் நிறுவனங்களையும் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், வக்ஃப் சட்டத்தில் 40 திருத்தங்களை செய்து, சட்டமாக நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தற்போதுள்ள சட்ட விதிகளை பலவீனப்படுத்தும் வகையில், அதில் திருத்தங்களை மேற்கொள்வதை ஏற்க முடியாது. இந்த சட்டத் திருத்தத்தை அனைவரும் எதிர்க்க வேண்டும்.

எனவே, வக்ஃப் சட்டங்களை பலவீனப்படுத்த பாஜக அரசுமுயன்றால், இண்டியா கூட்டணிக்கட்சிகள் மட்டுமன்றி, ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் சேர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜகவின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in