ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் கைது

ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் கைது
Updated on
1 min read

ராமேசுவரம்: நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களின் 2 படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், 9 பேரை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 497 விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

நேற்று அதிகாலை நெடுந்தீவு அருகே ஆரோக்கிய இசாக் ராபின், செல்வக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இரு படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், படகுகளில் இருந்தஆரோக்கிய சகாய ராபர்ட்(49),யாகோப்(29), முத்துராமலிங்கம்(65) ராதா(44), சேகர்(40), ஹரி கிருஷ்ணன்(50), பொன் ராமராஜ் (26), ராம்குமார் (24), லிபின் சாய் (25) ஆகிய 9 மீனவர்களை கைது செய்தனர். பின்னர் மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில்அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in