அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் ஓய்வூதிய பலன்களை உடனே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு, அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தலைவர் டி.குருசாமி தலைமையில், சென்னை பல்லவன் இல்லம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமைப்பின் பொதுச்செயலாளர் கே.வீரராகவன், பொருளாளர் எஸ்.ஆதிமூலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . 

| படம்: ம.பிரபு |
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு, அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் தலைவர் டி.குருசாமி தலைமையில், சென்னை பல்லவன் இல்லம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அமைப்பின் பொதுச்செயலாளர் கே.வீரராகவன், பொருளாளர் எஸ்.ஆதிமூலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . | படம்: ம.பிரபு |
Updated on
1 min read

சென்னை: கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாத ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2022-ம் ஆண்டுநவம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை போன்ற நிலுவைகளை வழங்க வேண்டும்.

2015-ம் நவம்பர் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வேண்டும் என்பன உள்பட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளிகள் அவர்களின் சங்க அலுவலகத்தில் ஒன்றுகூடினர்.

பின்னர் அங்கிருந்து பல்லவன் இல்லம் வரை ஊர்வலமாக வந்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அதையடுத்து பல்லவன் இல்லம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசையும், போக்குவரத்துத் துறைஅமைச்சரையும் கண்டித்து முழக்கமிட்டனர்.

பின்னர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.வீரராகவன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் கடந்த 2022 நவம்பர் முதல் வழங்கப்படவில்லை. ஓய்வுபெற்ற 88 ஆயிரம் பேரில் 33 ஆயிரம் பேர் 10 ஆயிரத்துக்கும் குறைவாகவே ஓய்வூதியம் பெறுகின்றனர்.

அதனால் அவர்களது வாழ்வாதாரம் பெரும் சவாலாக உள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், அரசு எங்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்காமல் இழுத்தடிக்கிறது.

எங்கள் பிரச்சினை தீரும் வரை போராட்டம் தொடரும். இதற்காக பெரிய இயக்கம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து விரைவில் கூடவிருக்கும் எங்கள் அமைப்பின் நிர்வாகக் குழுக்கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் டி.குருசாமி, பொருளாளர் எஸ்.ஆதிமூலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in