Last Updated : 04 Jun, 2024 05:40 PM

 

Published : 04 Jun 2024 05:40 PM
Last Updated : 04 Jun 2024 05:40 PM

திருவள்ளூரில் காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி முகம்: 4 லட்சம் வாக்குகள் வித்தியாசம்

சசிகாந்த் செந்தில்

திருவள்ளூர்: திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவர், 20-வது சுற்றின்படி, பாஜக வேட்பாளரைவிட 4,20,574 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

அவர், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் பதிவான 14,30,738 வாக்குகளில் 20-வது சுற்றின் படி, பாஜக வேட்பாளரைவிட 4,20,574 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்:

  • சசிகாந்த் செந்தில்(காங்கிரஸ்) - 5,88,695
  • பொன்.வி. பாலகணபதி(பாஜக) - 1,68,121
  • கு.நல்லதம்பி (தேமுதிக) - 1,66,618
  • எம்.ஜெகதீஷ்சந்தர்(நாம் தமிழர்)- 86,564

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x