மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முன்னாள் ராணுவ வீரர் உடல் தானம் பெற மறுப்பு

வேலுச்சாமி
வேலுச்சாமி
Updated on
1 min read

மதுரை: மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தமுன்னாள் ராணுவ வீரர் வேலுச்சாமி, 2014-ல் தனது உடலை தானமாக வழங்க ஒப்புதல் அளித்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த வேலுச்சாமியின் உடலை, மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க உறவினர்கள் முயற்சித்தனர்.

ஆனால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமாக செயல்படுவதால், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் வேலுச்சாமி உடலை ஆம்புலன்ஸில் எடுத்து வந்த உறவினர்கள், ஆட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர். இதுகுறித்துஆட்சியர் விசாரணை மேற்கொண்டார்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை ‘டீன்’ (பொ) தர்மராஜிடம் கேட்டபோது, ‘‘மக்களவைத்தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரியில் உடல்களை பெற்று வைக்கும் அதிகாரம் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் இல்லை. மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்புதல் பெற்றபிறகே, இதில் முடிவு எடுக்க முடியும் என்றார்.

மாவட்ட உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘தேர்தல் விதிமுறைகள் காரணமாக, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் யாரையும் அனுமதிக்க முடியாது. எனவே, மருத்துவமனையின் பிணவறை பகுதியில் உடலை வைக்க மருத்துவக் கல்லூரி நிர்வாகம் ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் இதற்கு உறவினர்கள் சம்மதிக்காததால், மருத்துவக் கல்லூரியிலேயே உடலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in