கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு வெள்ளி, சனி, விசேஷ நாட்களில் மட்டும் பேருந்துகள் இயக்கம்

கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு வெள்ளி, சனி, விசேஷ நாட்களில் மட்டும் பேருந்துகள் இயக்கம்
Updated on
1 min read

சென்னை: போக்குவரத்து துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) சார்பில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பணிபுரிவதால், திருவண்ணாமலை தடத்தில் செல்லும் பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 24-ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி ஆகிய வார இறுதி நாட்களிலும், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு சோதனை அடிப்படையிலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆற்காடு, ஆரணி வழியாக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in