Published : 11 May 2024 06:11 AM
Last Updated : 11 May 2024 06:11 AM

மாநகர பேருந்துகளில் 12 மணி நேர வேலை: சிஐடியு புகார்

சென்னை: அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் வி.தயானந்தம், எம்டிசி பணிமனைகள் செயல்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் தொழிலாளர் ஆய்வாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிலாளர்கள் 8 மணி நேரம்,16 மணி நேரம் முறையில் பணிபுரிகின்றனர். 8 மணி நேர பணிக்கு ஒருவருகை பதிவும், 16 மணி நேரபணிக்கு இரு வருகை பதிவும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு 8 மணி நேரம் வேலையை 12 மணி நேரமாக மாற்றி ஒரு வருகை பதிவுடன் ரூ.500 ஊதியமும் அளிக்கப்பட்டது. அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின்எதிர்ப்பையடுத்து இந்த முறை கைவிடப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் 12 மணி நேரம்வேலை முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது சட்டப்படி தவறானதாகும். எனவே, 12 மணி நேர வேலை முறையை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x