கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய நுழைவுவாயில் ஜூன் மாதம் திறப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நுழைவுவாயில். படம்: ஜெ.மனோகரன்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நுழைவுவாயில். படம்: ஜெ.மனோகரன்.
Updated on
1 min read

கோவை: கோவை ஸ்டேட் பாங்க் சாலையில் அமைந்துள்ளது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இந்த வளாகத்தில் 35 பிரதான அரசுத்துறைகளும் 100-க்கும் மேற்பட்ட அரசுத் துறை சார்ந்த கிளை அலுவலகங்களும் செயல்படுகின்றன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. இச்சூழலில் தற்போது உள்ள நுழைவு வாயில் பகுதியில் இட நெருக்கடி காணப்படுவதால் ஸ்டேட் பாங்க் சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே புதிய நுழைவுவாயில் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புதிய நுழைவுவாயில் உள்ளே செல்லும் பகுதியாகவும், பழைய நுழைவுவாயில் வெளியேறும் பகுதியாகவும் மாற்றப்பட உள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கூறும் போது, ‘‘புதிதாக அமைக்கப்பட்டு வரும் நுழைவு வாயில் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. ஸ்டேட் பாங்க் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம், ஏடிஎம் உள்ளிட்டவற்றை இடமாற்றம் செய்வதா அல்லது தற்போது உள்ள இடத்திலேயே தொடர அனுமதிப்பதா என்பது குறித்து சாலை பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in