சென்னையின் தினசரி மின்தேவை புதிய உச்சம்

சென்னையின் தினசரி மின்தேவை புதிய உச்சம்

Published on

சென்னை: கோடை வெயில் தற்போது வாட்டி வதைப்பதால் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்டை தாண்டி பதிவாகி வருகிறது. இதற்கேற்ப தமிழகத்தின் மின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, கடந்த 8-ம் தேதி 20,125 மெகாவாட் என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதை தடையின்றி மின்வாரியம் பூர்த்தி செய்தது. இந்நிலையில், சென்னையின் தினசரி மின் தேவையும் அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றுமுன்தினம் (6-ம் தேதி) இரவு10.30 மணிக்கு சென்னையின் மின்தேவை மிக அதிகபட்சமாக 4,590 மெகாவாட்டாக அதிகரித்தது. இதற்கு முன்பு, கடந்த 3-ம் தேதி 4,470 மெகாவாட் என்னும் புதிய உச்சத்தை எட்டியது.

மேலும், சென்னையின் தினசரி மின்நுகர்வு நேற்றுமுன்தினம் 97.7 மில்லியன் யூனிட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முன்பு கடந்த 3-ம் தேதி தினசரி மின்நுகர்வு 97.43 மில்லியன் யூனிட்டாக இருந்தது. இதையும் தடையின்றி பூர்த்தி செய்ததாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in