தென்னை விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. இறக்குமதியை குறைத்து, தேங்காய் எண்ணெயை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசே நேரடியாக தேங்காய் எண்ணெய்யை கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகளில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப தேங்காயை இறக்குமதி செய்யவும், தேங்காய் விலை குறையும்போது தேங்காய்க்கு உரிய விலை கிடைக்கவும், கொப்பரைத் தேங்காய்க்கான கொள்முதல் விலையை அரசே நிர்ணயம் செய்யவும், தென்னை விவசாயிகள் நஷ்டம் அடையும்போது நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதி 66-ல் கூறியபடி நல வாரியத்தின் மூலம் அரசே தேங்காயை கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in