Published : 28 Apr 2024 05:44 AM
Last Updated : 28 Apr 2024 05:44 AM

முதல்வர் ஸ்டாலின் நாளை கொடைக்கானல் வருகை: 5 நாட்கள் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க திட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஓய்வு எடுப்பதற்காக நாளை (ஏப்.29) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் வருகிறார்.

முன்னதாக, குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க ஏப்.29-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவு செல்லத் திட்டமிட்டிருந்தார். திடீரென அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நாளை (ஏப்.29) காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்தினருடன் மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் வருகிறார். அங்கு தனியார் ஹோட்டலில் குடும்பத்தினருடன் மே 3-ம் தேதி வரை 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார்.

கடந்த 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்ததும் குடும்பத்துடன் வந்து தங்கி ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஓய்வெடுக்க வருகிறார். ஓய்வுக்காக வருவதால், கட்சியினர் யாரும் முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை. மே 3 அல்லது மே 4-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x